<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13129919</id><updated>2011-12-01T03:20:10.057-08:00</updated><title type='text'>Senthil Arumugam's blog</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>17</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-1841066160883211927</id><published>2008-06-10T07:48:00.002-07:00</published><updated>2008-06-10T07:57:33.833-07:00</updated><title type='text'>மதுவிலக்கும் - மக்கள் சக்தி இயக்கமும்</title><content type='html'>&lt;strong&gt;மதுவிலக்கும் - மக்கள் சக்தி இயக்கமும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்று ஒருபுறம் மதுப்புட்டிகளில் எழுதிவிட்டு 2007-08ல்ரூ.8800 கோடி வருமானத்தை மதுவிற்பனையிலிருந்து பெற்றிருக்கிறது தமிழக அரசு. 2008-09ல் இது ரூ.10 ஆயிரம்கோடியாக உயரவுள்ளது. இது மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இலட்சக்கணக்கானஏழைத்தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதோடு, பெண்கள்-குழந்தைகளின் நலவாழ்வு-உரிமையையும் பறிக்கிறது மது.மக்களின் நலவாழ்வைவிட அரசாங்கத்தின் வருமானம்தான் முக்கியம் என்கிறது அரசு. இளைய தலைமுறையினர்மதுவில் மூழ்கிவிடாமால் காப்பாற்றப்பட வேண்டியதை மக்கள் சக்தி இயக்கம் ஒரு முக்கியமானதொரு பணியாகக் கருதுகிறது.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். சுவருக்கே சேதாரம் என்றால்??&lt;br /&gt;&lt;br /&gt; பல்வேறு சமூகக் கொடுமைகளுக்குக் காரணமாகஇருக்கும் மதுவை படிப்படியாகக் குறைத்து பூரண மதுவிலக்கை கொண்டுவருவது மக்கள் சக்தி இயக்கத்தின் முக்கியமானதொரு கொள்கை. ஊரெங்கும் மதுக்கடைகளை திறந்துவைத்துவிட்டு, மது குடிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுவதுஎடுபடாது. எனவே மது குறித்து அரசு ஒரு கொள்கை முடிவெடுத்து மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் மதுப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.அரசு அத்தகைய கொள்கை முடிவெடுக்க இது பெரும்பாலான மக்களின் கோரிக்கை என்பதை அரசுக்கு உணர்த்தவேண்டும்.மதுவிலக்கிற்கு ஆதரவான மக்களின் சக்தியை ஒன்றுதிரட்டும் பணியில் தீவிரமாய் களமிறங்கியுள்ளது மக்கள் சக்தி இயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டு நலனில் அக்கறையுள்ள உங்களைப் போன்றோரின் ஆதரவை வேண்டுகிறோம்.  For Contact : 9443119564, 044-24421810&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;மதுவிலக்கு குறித்த இயக்கத்தின் செயல்பாடுகள்,கருத்துகள்:&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;செயல்பாடுகள்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;br /&gt;ஜீன் 22,2008 - மதுரையில் மதுவிலக்கு ஆர்வலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்&lt;br /&gt;மே 31, 2008 - சென்னையில் மதுவிலக்கு ஆர்வலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்&lt;br /&gt;ஏப்ரல் 27,2008 - உண்ணாவிரதப் போராட்டம் - கைது&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;கட்டுரைகள்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. மதுவிலக்கு வரலாறு&lt;br /&gt;&lt;br /&gt;2. மதுவிலக்கு மாயையா?&lt;br /&gt;              -கலைஞர் கட்டுரைக்கு மறுப்பு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-1841066160883211927?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/1841066160883211927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=1841066160883211927' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/1841066160883211927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/1841066160883211927'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2008/06/blog-post.html' title='மதுவிலக்கும் - மக்கள் சக்தி இயக்கமும்'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-6586371529350350480</id><published>2007-12-18T07:21:00.000-08:00</published><updated>2007-12-18T07:24:10.998-08:00</updated><title type='text'>Educational Loan</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;Educational Loan&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;Story of a first generation girl student entering college.&lt;br /&gt;Educational loan was denied to her because of poor marks in +2 ......&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://www.makkalsakthi.org/Nammal_Mudiyum/dec07/Kalvi-Kadan-Article.pdf"&gt;http://www.makkalsakthi.org/Nammal_Mudiyum/dec07/Kalvi-Kadan-Article.pdf&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-6586371529350350480?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/6586371529350350480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=6586371529350350480' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/6586371529350350480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/6586371529350350480'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2007/12/educational-loan.html' title='Educational Loan'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-7207401023188334268</id><published>2007-12-06T15:53:00.001-08:00</published><updated>2007-12-06T16:04:54.795-08:00</updated><title type='text'>Thoguthi Sabai for MLA and MPs</title><content type='html'>Our democracy is called as "Representative democracy". ie, we elect MLAs and MPs and send them to Assembly and Parliament to speak onbehalf of us.  But how do they get people's opinion. so far there is no defined process.&lt;br /&gt;&lt;br /&gt;This article presents put forth a process for that:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://makkalsakthi.org/Nammal_Mudiyum/Senthil/Thoguthi_Sabai_Article_June2007.pdf"&gt;http://makkalsakthi.org/Nammal_Mudiyum/Senthil/Thoguthi_Sabai_Article_June2007.pdf&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-7207401023188334268?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/7207401023188334268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=7207401023188334268' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/7207401023188334268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/7207401023188334268'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2007/12/thoguthi-sabai-for-mla-and-mps.html' title='Thoguthi Sabai for MLA and MPs'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-1428243763518965627</id><published>2007-12-06T15:53:00.000-08:00</published><updated>2007-12-06T15:57:03.577-08:00</updated><title type='text'>Reservation History</title><content type='html'>History of Reservation in Tamilnadu&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://makkalsakthi.org/Nammal_Mudiyum/Senthil/Reservation_Article_May2007.pdf"&gt;http://makkalsakthi.org/Nammal_Mudiyum/Senthil/Reservation_Article_May2007.pdf&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-1428243763518965627?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/1428243763518965627/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=1428243763518965627' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/1428243763518965627'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/1428243763518965627'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2007/12/reservation-history.html' title='Reservation History'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-9060470110218831408</id><published>2007-11-26T21:48:00.000-08:00</published><updated>2007-11-26T22:00:18.084-08:00</updated><title type='text'>காமராஜர் ஆட்சி</title><content type='html'>தமிழகத்தின் பொற்காலம் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காமராஜரின் 9.5 ஆண்டுகால(1954-1963) சாதனைகளின் தொகுப்பு... கல்வி,விவசாயம்,தொழில்துறை எனஅனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்த காமராஜரின் ஆட்சி ஒரு முன்னுதாரண ஆட்சிஎன்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இருக்கமுடியாது.  ஆதலால்தான், தமிழகத்தில் "நல்லாட்சி" என்பதும் "காமராஜர் ஆட்சி" என்பதும் ஒரே அர்த்தத்தில் பொருள்கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;a href="http://www.makkalsakthi.org/Nammal_Mudiyum/Senthil/Kamarajar_Aatchi_July2007.pdf"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.makkalsakthi.org/Nammal_Mudiyum/Senthil/Kamarajar_Aatchi_July2007.pdf"&gt;http://www.makkalsakthi.org/Nammal_Mudiyum/Senthil/Kamarajar_Aatchi_July2007.pdf&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-9060470110218831408?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/9060470110218831408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=9060470110218831408' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/9060470110218831408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/9060470110218831408'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2007/11/blog-post.html' title='காமராஜர் ஆட்சி'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-4621309357623944890</id><published>2007-05-03T17:44:00.000-07:00</published><updated>2007-05-03T17:55:07.860-07:00</updated><title type='text'>மனமிருந்தால் மார்க்கமுண்டு : தமிழக மதுவிலக்கு வரலாறு</title><content type='html'>&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மதுவிலக்கு சாத்தியமா? என்கிற விவாதம் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஆளும் கட்சியான தி.மு.கவிற்கும் பட்டிமன்றம் போல் பரபரப்பாக நடந்துவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து மாநிலங்களில் மது விற்பனையாகிறது; கள்ளச்சாராயம் பெருகிவிடும்; மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படும் போன்ற அடுக்கடுக்கான காரணங்களைச் சொல்லி மதுவிலக்கு சாத்தியமில்லை என்கிறது தி.மு.க ?&lt;br /&gt;&lt;br /&gt;மதுவிலக்கு சாத்தியமே. 6 மாதம் போலீஸ் துறையை எங்களிடம் கொடுத்துப் பாருங்கள் செய்து காட்டுகிறோம்; குஜராத்தில் மதுவிலக்கு அமுலில் இருந்தும் மக்கள் நலத்திட்டங்கள் நன்றாகத்தான் நிறைவேற்றப்படுகிறது என்கிறது பா.ம.கா.&lt;br /&gt;&lt;br /&gt;மதுவிலக்கு சாத்தியமா இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லுமுன்னர் இன்று ஏன் இது விவாதப் பொருளாக ஆகி இருக்கிறது என்ற கேள்வி பலருள் எழலாம். ஏதோ உடலுழைப்புத் தொழிலாளிகள் களைப்பு தீர கொஞ்சம் குடிக்கிறார்கள். இதனால் என்ன "குடியா முழுகிப் போகிறது" என்று கூட சிலர் கேட்கலாம். இப்படிக் கேட்பவர்களுக்கு இந்த புள்ளிவிவரம் பிரச்சனையின் ஆழத்தைப் புரியவைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;1983ல் மதுபான விற்பனை ரூ.139 கோடி.&lt;br /&gt;2005-2006ல் மதுபான விற்பனை ரூ.7335 கோடி.&lt;br /&gt;22 வருடங்களில் 52 மடங்கு வளர்ச்சி.&lt;br /&gt;வருடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு வளர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;குடி முழுகித்தான் போய்விடுமோ என்ற கவலை வருகிறதுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;சரி... என்னதான் செய்வது ?&lt;br /&gt;&lt;br /&gt;மதுவிலக்கு என்பது இன்றோ, நேற்றோ பேசப்படும் விஷயமல்ல. கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான இந்த விஷயத்தில் வரலாறு என்ன சொல்கிறது என்று பார்த்தால் நமக்கு புதிய வழிகள் புலப்படும். மதுவிலக்கு வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுவினால் ஏற்படும் சமூகப்,பொருளாதார பாதிப்புகளை உணர்ந்த காந்தியடிகள் சுதந்திரப்போராட்டத்தின் முக்கிய அங்கமாக, கள்ளுக்கடை மறியலை முன்னிறுத்தினார். நிர்மாணத்திட்டத்திலும் இது முக்கிய இடம் பெற்றது. 1931ல் அன்றைய சென்னை மாகாணத்தில் நடந்த 9000 சாராயக்கடைகளுக்கான ஏலத்தில் 6000த்திற்கும் மேற்பட்ட கடைகளை ஏலம் எடுக்க ஆட்கள் வரவில்லை என்பதிலிருந்து காந்தியடிகளின் பிரச்சாரம் எந்த அளவிற்கு மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை உணரலாம். மதுவால் அதிகமாக பாதிக்கப்படுவோர் பெண்கள் என்பதால், அவர்களின் தலைமையிலேயே மதுவிலக்கு பிரச்சாரம் நடத்தப்படவேண்டும் என்ற யுக்தி நல்ல பலனைப் பெற்றுத் தந்தது. கள்ளுக்கடை மறியல் போராட்டம் எப்போது நிறுத்தப்படும் என்று நிருபர்கள் கேட்டதற்கு அண்ணல் காந்தியடிகள் "...அது ஈரோட்டிலிருக்கும் கண்ணம்மையையும், நாகம்மையையும் கேட்கவேண்டும்" என்றார். நாகம்மை பெரியாரின் துணைவி. கண்ணம்மை பெரியாரின் சகோதரி.&lt;br /&gt;&lt;br /&gt;மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக தனது சொந்த தோட்டத்தில், அரசு அனுமதியின் பேரில் கள் இறக்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் பெரியார். துணைவியார், சகோதரி, பெரியார் என்று ஒட்டு மொத்த குடும்பமே மதுவிலக்கிற்காகப் பாடுபட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி வழி வந்த இராஜாஜி, 1937இல் தமிழக முதலமைச்சராகப் பெறுப்பேற்றதும் மதுவிலக்குச் சட்டத்தைக் கொண்டுவந்தார். முதன்முதலில் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கு அமுல் செய்யப்பட்டது. அப்போதைய கவர்னர், மதுவிலக்கை அமுல்படுத்தினால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும்; அதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்தார். அப்போதும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வழி என்ன என்று யோசித்தாரே தவிர மதுவிலக்கிலிருந்து பின்வாங்கவில்லை. தீவிர ஆலோசனைக்குப்பிறகு "விற்பனை வரி" என்ற புதிய வரி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதாவது குடிப்பழக்கம் நின்று போனால், மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகும். அதனால் மக்களின் வாங்கும் சக்தி பெருகும். இதனால் விற்பனை வரி வசூலும் அதிகரிக்கும் என்பதுதான் திட்டம். இன்னும் சொல்லப்போனால், 1917ல் ராஜாஜி அவர்கள் சேலம் நகரசபைத் தலைவராக இருந்தபோதே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து மதுக்கடைகளை மூடவைத்தார். மதுவிலக்கிற்கு சிறப்புச் சட்டம் எதுவும் இல்லாத காலகட்டத்திலேயே அவரால் இதனைச் செய்யமுடிந்தது. மனமிருந்தால் மார்க்கமுண்டு சொல்லிக்கொண்டு மட்டும் இருந்துவிடாமல் செய்தும் காட்டினார். இரண்டம் உலகப்போரின் காரணமாக 1939ல் இராஜாஜி அரசு பதவி விலகியதும் ஆங்கிலேயர் ஆட்சியில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1945ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. மதுவிலக்கை அமல்படுத்துவதைக் கடமையாகக் கொண்டிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சி 1946ல் தொடங்கி 1949 வரையில் தொடர்ந்து செயல்பட்டு நான்கு கட்டங்களில் மாநிலம் முழுவதும் மதுவிலக்கை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இந்த அரும்பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்தது ஓமந்தூர்.ராமசாமி ரெட்டியாரின் தலைமையிலான அரசாங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வந்த காங்கிரஸ் முதலமைச்சர்கள் இராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம் ஆகியோர் ஆட்சியில்(1967 வரை) பூரண மதுவிலக்கு அமல் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1967ல் அண்ணா தலைமையிலான தி.மு.க. அணி ஆட்சியைப் பிடிக்கிறது. மதுவிலக்குக் கொள்கையின் தீவிர ஆதரவாளரான அண்ணா அவர்கள் பூரண மதுவிலக்கை தொடர்ந்து அமல்படுத்தினார். 1968 ஏப்ரல் 12ம் நாள் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மதுவிலக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்றிய உரையில்&lt;br /&gt;&lt;br /&gt;"..... மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தோன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டி போல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வோம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியதோடு நின்றுவிடாமல் மற்ற மாநிலங்களிலும் இது அமலுக்கு வரவேண்டும் என்று விருப்பப்பட்ட அண்ணா அவர்கள் அதே மாநாட்டில்&lt;br /&gt;&lt;br /&gt;".....மதுவிலக்கைத் தளர்த்தியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களான திரு.காமராஜ் அவர்களுடனும் திரு.பக்தவத்சலம் அவர்களுடனும் கை கோர்த்துப் பிரச்சாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூவரும் ஒன்று சேர்ந்து மற்ற மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுவோமென்றால் அந்த நாள் பொன்னாள். இந்த நல்ல முயற்ச்சிக்குஅந்த இரண்டு காங்கிரஸ் தலைவர்களும் இசைவைத் தெரிவிப்பார்களானால் நான் பிரச் சாரம் செய்வது மட்டுமல்ல மதுவிலக்கை ரத்து செய்துள்ள மாநிலங்களில் சட்டமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொடர்ந்து மதுவிலக்கை அமுல்படுத்தக் கேட்டுகொள்வோம். இம்முறையில் நமக்குச் சிறைத் தண்டனை கிடைத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயார்." என்று அறைகூவல் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1969ல் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த சமயத்தில் காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டதை காரணம் காட்டியும், மாநிலத்தின் நிதி நிலைமையைக் காரணம் காட்டியும் மதுவிலக்கை ரத்து செய்து கோவையில் 1971ல் நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1946லிருந்து 25 ஆண்டுகள் அமலில் இருந்த "மதுவிலக்கு" 1971ல் ரத்து செய்யப்பட்டது. கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. பல்வேறு காரணங்களால், 1974 இறுதியில் தமிழ்நாட்டில்&lt;br /&gt;மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;1977ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் படிப்படியாக மதுவிலக்கைத் தளர்த்தி கள்ளுக்கடைகள், குறைந்த போதையூட்டும் சாராயம், இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகள்(IMFL) போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் பர்மிட் வைத்திருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையும் சரிவர செயல்படுத்த முடியாததால், மீண்டும் மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்த விரும்பி கள்ளுக்கடைகள், சாராயக்கடைகளை முழுமையாக மூடினார். IMFL மட்டும் விற்பனை செய்யும் முறையை அமல்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;1987ல் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் "மலிவு விலை மதுவை" தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1991ல் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் "மலிவுவிலை மதுக்கடைகளை" மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டு தன் ஆட்சியைத் தொடங்கினார். அன்றிலிருந்து அக்டோபர் 2003 வரை இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகள்(IMFL) தனியார் பிராந்திக் கடைகள் மூலம் விற்கப்பட்டு வந்தன. தனியார் கடைகளை ஏலம் எடுப்பதில் நடைபெறும் முறைகேடுகளை களையும் வகையில், அரசாங்கத்திற்கு வருவாயைப் பெருக்கும் நோக்கிலும் பிராந்திக் கடைகளையும் அரசே(டாஸ்மாக்) எடுத்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. 2003லிருந்து இன்று வரை இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகள்(IMFL) மட்டும் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டாஸ்மாக் நிறுவனம் பிராந்திக் கடைகளை எடுத்து நடத்த ஆரம்பித்த பிறகு அரசுக்கு வரும் வருவாய் 115 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்கிறது அரசு. மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டு சாராய வியாபாரம் சக்கை போடு போட்டு வருகிறது தமிழகத்தில். விவசாயிகளுக்கு கடன் வழங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை விட டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை இருமடங்கு என்றால் டாஸ்மாக்&lt;br /&gt;எந்தளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். காமராஜர் அவர்கள் ஊர்தோறும் பள்ளிகள் தொடங்கிய பெருமை பெற்றது போல் ஊர் தோறும் மதுக்கடைகள் திறந்த புண்ணியம்(!) செல்வி ஜெயலலிதாவைச் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பூரண மதுவிலக்கையும் செய்யாமல், தென்னை,பனைத் தொழிலாளிகளுக்கு நல்லதொரு தொழில் வாய்ப்பான கள்ளையும் தடை செய்திருக்கும் அரசின் இரட்டை நிலை நம்மை கவலையடையச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, காந்தி தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் மதுவிலக்கிற்காக பாடுபட்டவர்கள் அனைவரும் மதுவை ஒரு பொருளாதார விஷயமாக மட்டும் பார்க்கவில்லை. ஒரு புத்தகம் திறக்கப்படும்போது சிறைச்சாலைக் கதவு ஒன்று மூடப்படுகிறது என்பார்கள். அதுபோல மதுப்புட்டி ஒன்று திறக்கப்படும்போது சமுதாயப் பிரச்சனை ஒன்று தலையெடுக்கிறது என்ற புரிதலோடுதான் பார்த்தார்கள். குறிப்பாக இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்தான் என்பதனை உணர்ந்து எப்பாடு பட்டேனும் மதுவிலக்கை அமல்படுத்தித்தான்&lt;br /&gt;தீரவேண்டும் என்ற மன உறுதியோடுதான் செயல்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்புரிதலும், மன உறுதியும் இருந்ததால்தான் காந்தியால் மதுவிலக்கிற்காக பல்வேறு வடிவிலான போராட்டங்களை வடிவமைக்க முடிந்தது. இராஜாஜியால் மதுவிலக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது; விற்பனை வரி என்னும் பொருளாதார இழப்பை சரிகட்டும் முறையை அறிமுகப்படுத்த முடிந்தது. பெரியார் தனது துணைவியார், சகோதரியோடு மதுவுக்கு எதிரான போர்க்களத்தில் இறங்கினார். காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு மற்ற மாநிலங்களிலும் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய தான் தயார் என்றார் அண்ணா. மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த முயற்சி தோல்வி கண்டும் தொடர்ந்து முயற்சித்தார் எம்.ஜி.ஆர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுள்ள சூழலில் வெறும் சட்டத்தால் மட்டும் மதுவிலக்கு சாத்தியமாகாது. காந்தி காலத்தில், மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள் வெளியிடப்பட்டது. "விமோசனம்" என்ற பத்திரிக்கையின் முதல் இதழை முழுக்க, முழுக்க இராஜாஜியே தயாரித்தார். அன்றுள்ள தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்தார்கள். இன்று நமக்கு, டி.வி, ரேடியோ, எஃப்.எம், என்று எத்தனையோ மக்கள் தொடர்பு சாதனங்கள் உள்ள சூழலில் மக்களிடம் மதுவிலக்குப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்வது ஒன்றும் பெரிய பிரச்சனையாக இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;"நிதிப்பற்றாக்குறை இருப்பதைக் காரணம் காட்டி, மதுவிலக்குக் கொள்கையை நான் தளர்த்தி விட்டேன் என்றால் சாமன்ய மக்கள் குடிகாரர்களாக மாறி தமிழகத்தின் எதிர்காலமே இருண்டுவிடும். எனவே அரசுக்கு நிதி கிடைக்கும் என்பதற்காக மதுவிலக்கை ரத்து செய்ய மாட்டேன் என்று கூறியதுடன் 'எனக்குப் பின்னால் வரும் இளைய சமுதாயத்தினரும் குடி என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பார்கள்" என்றார் அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவின் வழிநடக்கும் தி.மு.கவும், அ.தி.மு.கவும் மனது வைத்தால் மதுவிலக்கு சாத்தியம். காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றும் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் மனது வைத்தால் மதுவிலக்கு சாத்தியம். பா.ம.கவின் நல்லதொரு வேண்டுகோளை ஆளுங்கட்சி மனதார ஏற்றுக்கொண்டால்கூட மதுவிலக்கு சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, மதுவிலக்கு வேண்டுமென்று அரசு மனது வைத்தால் இது சாத்தியம். அரசியல் தலைவர்களுக்குத் தெளிவும், துணிவும் இருந்தால் இது சாத்தியம். ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் "மனமிருந்தால் மார்க்கமுண்டு".&lt;br /&gt;&lt;br /&gt;April-07&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-4621309357623944890?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/4621309357623944890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=4621309357623944890' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/4621309357623944890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/4621309357623944890'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2007/05/blog-post.html' title='மனமிருந்தால் மார்க்கமுண்டு : தமிழக மதுவிலக்கு வரலாறு'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-116662910048041255</id><published>2006-12-20T07:32:00.000-08:00</published><updated>2006-12-20T07:38:20.500-08:00</updated><title type='text'>கிராமங்களும்....நகரங்களும்</title><content type='html'>நான் கோவையிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து ஒரு வருடமாகிறது. பல்வேறு சமூகப் பணிகளுக்காக தமிழகத்தின் பல கிராமங்களுக்கும், சிற்றூர்களுக்கும் சென்றுவிட்டு சென்னை திரும்பும்போது எத்தனையோ ஒப்பீடுகள் மனத்திரையில் ஓடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய சாலைகள் தினந்தோறும் கூட்டப்பட்டு கல், மண் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தண்ணீர் ஊற்றிக் கழுவியும் விடுவார்களோ என்னவோ ( நான் பார்த்ததில்லை !! ) ...இப்போது புதிதாகப் போடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய சாலையின் இரு மருங்கிலும் மரங்கள், செடிகள், ஓவியங்கள், கலைநயம்மிக்க இரும்பு வார்ப்புகள் என இழைத்து, இழைத்து சாலை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள், இது சென்னை நகரில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்கான கிராமங்களில் கல்,மண்,குழி,மேடு இவைகள்தான் இன்னமும் சாலைகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;போன உயிரை திருப்பித்தருதல் என்ற ஒரே சிகிச்சையைத் தவிர அனைத்து சிகிச்சைகளையும் தர தனித்தனி மருத்துவர்கள், மருத்துவமனைகள், சென்னை நகரில்.கிராமங்களில் அனாதைக் குழந்தை போல் கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் பிடிக்கும் கனவுத்திட்டத்தை ஆரம்பப் பள்ளியிலிருந்து ஊற்றி வளர்க்கும் பெற்றோர்கள், ஒரு புறம்.உண்ணல், உறங்கல், உழைத்தல் இவற்றிற்கே நேரம் போதாத வறுமை நிலையில் பெற்றோர்கள், மறுபுறம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறியியற் கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலை கிடைக்கிறது. பத்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை சம்பளத்தோடு, 22 வயதிலேயே.&lt;br /&gt;மாத வருமானம் 2000த்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகள், விவசாயிகள் பல இலட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து மக்கள் என்று மட்டுமில்லை, நகரங்களில் உள்ள சேரிகள், கீழ் நடுத்தரக் குடும்பங்கள் அனைவருக்கும் இதே நிலைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏன், இந்த மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் ?&lt;br /&gt;&lt;br /&gt;                 இரண்டு புறம் இருப்பவர்களும் மனிதர்கள்தானே ?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பேரும் வசிப்பது தமிழகத்தில்தானே ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளுக்கும்-பணக்காரர்களுக்கும், கிராமங்களுக்கும்-நகரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கும்போது ஒரு விகார உருவம் கண் முன் தோன்றுகிறது.  தரை வரை நீண்ட கைகள், ஒரு கால் தரையில் படாமல் தொங்கிக் கொண்டுள்ளது, பானை போல் பெருத்த வயிறு, காதுகள் இல்லை, மூக்கில் ஒரு துவாரம்தான் உள்ளது. நினைத்துப் பார்ப்பதற்கே அருவருப்பாய் உள்ளதல்லவா ? ஆம், அப்படித்தான் உள்ளது நமது சமூகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். ஏழைகள் பரம ஏழைகள் ஆகிக் கொண்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை ?&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லையா ? விவசாய மேதைகள் இல்லையா ? விஞ்ஞானிகள் இல்லையா ? நல்ல ஆசிரியர்கள் இல்லையா ? எல்லா வல்லுனர்களும் இருக்கிறார்கள். உபயோகித்துக் கொள்வதற்குத்தான் யாருமில்லை. "கடை விரித்தேன். கொள்வாரில்லை" என்று சொல்லுவார்கள். அதுபோல அறிவு வெள்ளம் கரை புரண்டோடுகிறது இங்கே. அணை கட்டிப் பயன்படுத்திக் கொள்ளத்தான் ஆளில்லை.ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஆட்சியாளர்களுக்கு ஏழைகளின் வளர்ச்சியில் அக்கறை போதவில்லை; அணுகுமுறை சரியில்லை என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஒரு அரசு அலுவலகத்தைப் பார்வையிட வந்திருந்தார். அங்கு அதிகாரிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. என்ன கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கேட்டார். கிராம வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். கொஞ்சம் யோசித்துவிட்டு " நீங்கள் ஏன் அருகிலுள்ள ஏதேனும் ஒரு கிராமத்திலுள்ள பொது இடத்தில் அமர்ந்து இதனைப் பற்றிப் பேசக்கூடாது? அரசு அதிகாரிகளாகிய நீங்கள் கிராமங்களுக்குச் சென்றால், உங்களைப் பார்ப்பதற்கு நிறைய கிராம மக்கள் வருவார்கள். அவர்களையும் வைத்துக் கொண்டு பேசுங்களேன்; கிராமத்திற்குத் தேவையான திட்டங்கள் பற்றி ஆலோசனை சொல்வதற்கு அவர்களை விடச் சிறந்த ஆலோசகர்கள் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்கள்." என்றார் காமராஜர். என்ன எதார்த்தம் பாருங்கள். இதுவல்லவா ஆட்சி முறை. இதுவல்லவா ஜனநாயகம். கிராம மக்களிடமிருந்து கூட ஆலோசனைகள் பெறவேண்டும் என்ற எண்ணமுடையவர், வல்லுனர்களை வணங்கியல்லவா வரவேற்றிருப்பார். மக்களைப் படிக்கும் இந்த மனோபாவத்தால்தான் அந்த படிக்காத மேதையின் 9 வருட ஆட்சியை "தமிழகத்தின் பொற்கால ஆட்சி" என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்றும் எல்லா அமைச்சர்களும் கிராமத்திற்குச் செல்கிறார்கள்; விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக !!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதியதாக ஆரம்பிக்கப்படும் பெரிய தொழில் நிறுவனங்கள் எல்லாம் நகரங்களுக்கு அருகிலேயே, குறிப்பாக சென்னை நகருக்கு அருகிலேயே ஆரம்பிக்கப்படுகிறது. அதனால்தான் நகரங்கள் வளர்கின்றன என்ற ஒரு வாதம் நம்முன் வைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நகருக்கு அருகில் ஆரம்பிக்க விரும்புகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்திற்கு அருகில் இருப்பதால், மின்சாரம், தண்ணீர், சாலைகள், கழிவுநீரகற்றும் வசதி, தொலைபேசி, இன்டர்நெட் போன்ற அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக்கின்றது. எல்லா அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகமும் சென்னையில்தான் இருக்கின்றது. இது போன்ற தொழிலுக்கு சாதகமான காரணிகள் அதிகம் இருப்பதால், நகருக்கு அருகில் தொழில் தொடங்க விரும்புகிறார்கள். இவர்களை நாம் வலுக்கட்டாயமாக கிராமத்தில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைத்தால் " அடிப்படை வசதிகள் செய்து தாருங்கள், வருகிறோம் என்பார்கள்". அதற்கு நம் ஆட்சியாளர்களிடம் பதில் கிடையாது. பிறகெப்படி தொழில் நிறுவனங்களை கிராமத்திற்கு அழைத்து வரமுடியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;சில அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது 'போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது' என்பார்கள். கிராமங்களுக்குத் தேவையான அடிப்படைவசதிகள் செய்து கொடுப்பதை ஒரு 'போர்க்கால நடவடிக்கையாக' அரசு எடுத்துச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து நகரங்கள் வளர்ந்து கொண்டும், கிராமங்கள் பின்தங்கியும் உள்ள சூழலே தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு செய்ய வேண்டும் எனும்போது, மத்திய அரசா, மாநில அரசா அல்லது உள்ளாட்சி அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பராமரித்தல் போன்ற பொறுப்புக்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தாலும் நிதியாதரம் இல்லாததால் மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் கையேந்தி நிற்கிறது தமிழ்நாட்டின் 12618 கிராம பஞ்சாயத்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் தொகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு( M.P) தொகுதி வளர்ச்சி நிதி என்றொரு நிதி அளிக்கப்படுகிறது. இது 1993-94 இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்டிற்கு ரூ.5 இலட்சமாக இருந்தது. 1994-95லிலேயே இது ரூ.1 கோடியாகியது. 1998-99 இல் இது ரூ.2 கோடியாகியது. இதனை மத்திய அரசு தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டிற்கு ரூ.1 கோடி தரப்படுகிறது. இதனை மாநில அரசு தருகிறது. ( தொகுதி வளர்ச்சி நிதி என்ற முறையே தேவையா...இல்லையா என்பது பற்றிய பல்வேறு விவாதங்கள், கோர்ட் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது ேவ்று விஷயம். அதைப்பற்றி பிறிதொரு சமயத்தில் விரிவாய்ப் பார்ப்போம்.)&lt;br /&gt;&lt;br /&gt;சட்டமியற்றும் பணிதான் எம்.எல்.ஏ, எம்.பிக்களின் தலையாய பணி. ஆனால் இவர்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி என்ற ஒரு நிதி ஒதுக்கி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள் என்கிறது அரசு. தொடர்ந்து இந்த நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசின் மொத்த வரி வருவாயிலிருந்து ஒதுக்கப்படும் நிதியானது 1997ல் இருந்து 8 சதவிகிதமாகவே இருந்து வருகிறது. அதாவது மாநில அரசுக்கு பல்வேறு வரி வசூல் மூலம் 100 ரூபாய் கிடைக்கிறது என்றால் அதில் 8 ரூபாயை உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கவேண்டும்.மாநில அரசின் வரி வருவாய் பல்வேறு துறைகளுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளைப் பெற வல்லுனர்களைக் கொண்ட "மாநில நிதி ஆணையத்தை" அமைக்கிறது அரசு. இந்த நிதிஆணையம் அரசுக்குப் பல்வேறு பரிந்துரைகளை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது நிதிஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தியிருந்தாலே இந்த ஒதுக்கீடு 2001 ம் ஆண்டே 12 சதவிகிதமாகியிருக்கும். ஆம், 1995ம் ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் நிதி ஆணையமானது 1997-98 ம் ஆண்டில் 8 சதவிகிதம் ஒதுக்குங்கள்; பிறகு ஒவ்வொரு வருடமும் 1 சதவிகிதத்தை அதிகரித்து 2001-02 இல் இதனை 12 சதவிகிதம் ஆக்குங்கள் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது. 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மூன்றாவது நிதி ஆணையம் கூட அமைக்கப்பட்டுவிட்டது. இன்னமும் 8 சதவிகித நிதிதான் உள்ளாட்சியமைப்புகளுக்குத் தரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தென்மாநிலங்களிலேயே உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைந்த நிதி ஒதுக்கும் மாநிலம் தமிழகம்தான். மேற்கு வங்காளம் தன் வரிவசூலில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை உள்ளாட்சிகளுக்கு ஒதுக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8 சதவிகிதத்தை இரண்டு மடங்காக்கிவிட்டால் கிராமங்கள் வளர்ந்து விடுமா ? அது மட்டுமே போதாது. அடிப்படை வசதிகள் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமே. நாம் கேட்பது, முதலில் அடித்தளத்தை அமையுங்கள். அதையே செய்யாமல், " வறுமையை ஒழிப்போம்" என்று வரட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-116662910048041255?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/116662910048041255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=116662910048041255' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/116662910048041255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/116662910048041255'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2006/12/blog-post.html' title='கிராமங்களும்....நகரங்களும்'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-116430454348089012</id><published>2006-11-23T09:47:00.000-08:00</published><updated>2006-11-23T10:00:05.420-08:00</updated><title type='text'>இளைஞர்களும் அரசியலும்...</title><content type='html'>&lt;p&gt;சமீப காலங்களில் நமது ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் தான் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர் கூட்டங்களில் எதிர்காலத்தில் அவர்கள் எந்தத் துறையில் ஈடுபட விரும்புகின்றனர் என்ற கேள்வியைத் தவறாது கேட்டு வருகின்றார். கணிப்பொறி, பொறியியல் வல்லுனர், விஞ்ஞானி, தொழிலதிபர், ஆசிரியர், மாவட்ட ஆட்சியர் போன்ற துறைகளில் ஈடுபட விரும்புவதாக பல மாணவ,மாணவியர் தெரிவிக்கின்றனர். &lt;/p&gt;&lt;p&gt;உங்களில் யார் அரசியலில் ஈடுபட்டு நல்லதொரு அரசியல் தலைவராக வர விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியைக் கேட்கும்போது, வெகுசிலரே நாங்கள் அரசியல்வாதிகளாக விரும்புகின்றனர் என்று பெருமையோடு சொல்கிறார்கள். இந்த செய்தியைப் படிக்கும்போது நம்முள் ஒரு கேள்வி எழுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;பெரும்பாலான இளைஞர்கள் அரசியலை ஏன் புறக்கணிக்கிறார்கள்?&lt;/p&gt;&lt;p&gt; முடிவு செய்யப்பட்ட கொள்கைகளை செயல்படுத்தும் பொறுப்பாகிய மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை தங்களின் இலட்சியக் கனவாகக் காண்கின்ற இளைஞர்கள் மிகப் பலர். ஆனால் அந்தக் கொள்கைகளையே முடிவு செய்யும் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அரசியல்வாதியாக விரும்புவோர் மிகச் சிலர்.ஏன் ? &lt;/p&gt;&lt;p&gt;ஏன் இந்த நிலை? ஆராய்வோம்.&lt;/p&gt;&lt;p&gt;முதலில், அரசியலை இளைஞர்கள் வெறுத்து ஒதுக்குவதற்கான காரணங்களை ஆராய்வோம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. அரசியல் = ஏமாற்றுதல் :&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சாதாரணமாக நாம் அலுவலகங்களிலும், வியாபாரத்திலும், விளையாட்டுகளின் போதும் யாரேனும் ஏமாற்றினாலோ, குழப்பத்தை விளைவித்தாலோ, முதுகில் குத்தினாலோ உடனே நம் வாயில் வரும் வார்த்தை இவன் அரசியல் பண்ணறான்டா.. . இது வாயிலிருந்து மட்டும் வரும் வார்த்தையல்ல. பல ஆண்டு கால அனுபவத்தின் வெளிப்பாடு. &lt;/p&gt;&lt;p&gt;ஆக, அதிகாரத்தை அடைவதற்காக, அதிகாரத்தின் மூலம் சொத்துக்களையும் அந்தஸ்தையும் பெருக்கிக் கொள்ள, ஏமாற்றுதல், பச்சோந்தித்தனமாக சூழ்நிலைக்குத் தக்கவாறு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுதல் போன்ற குறுக்கு வழிப் பயணங்கள்தான் அரசியல் என்று கடந்த தலைமுறை அரசியல்வாதிகள் பலர் அடையாளப்படுத்திவிட்டார்கள். எனவே, நியாயமான வழியில் செல்ல விரும்புவோர் நாம் இதில் சாதிக்க முடியாது என்று விலகிவிடுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. சொந்த வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுமே ?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியோ அல்லது அதுபோன்ற அரசின் எந்தப் பதவிக்கும் குறிப்பிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றால் வேலை நிச் சயம். பணி ஓய்வு பெறும்வரைக்கும் அடிப்படைத் தேவைகளை, வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கு உத்தரவாதம் கிடைக்கிறது. ஆனால் அரசியலில் அப்படியில்லை. &lt;/p&gt;&lt;p&gt;சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காவது பல்வேறு சலுகைகள் பணிக்காலத்திலும், பதவி விலகிய பின்னரும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் உள்ளாட்சி அமைப்பிலுள்ள பதவிகளுக்கு இந்தச் சலுகைகளும் கிடைப்பதில்லை. நடைமுறையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை தனது சொந்த பொருளாதாரத் தேவைகளுக்கு என்ன செய்வது என்பதற்கு தெளிவான வழிமுறை இளைஞர்களுக்குக் கிடைப்பதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;இப்படிப்பட்ட பொருளாதார நிச்சயமற்ற நிலை இருக்கும் போது நியாயமான வழியில் செல்ல விரும்புவோர் ஒதுங்கி நிற்பது நியாயமாகத்தான் படுகிறது. எப்படியும் வாழலாம் என்று இருப்பவர்கள் சம்பாதித்துக் கொள்ள அரசியலில் ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இப்படித்தான் வாழ வேண்டும் என்று இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. பெற்றோர், சமூக ஆதரவின்மை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இளைஞர்களின் வாழ்க்கை இலட்சியத்தை நிர்ணயிப்பதில் பெற்றோர்களும், சமூகமும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். சில சமயங்களில் பெற்றோர்கள் தாங்கள் என்ன படிக்காமல், சாதிக்க முடியாமல் போய்விட்டதோ அதனைத் தங்கள் மகன்/மகள் செய்யவேண்டுமென்று அவர்கள் மீது சில ஆசைகளைத் திணிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இன்றுள்ள சூழ்நிலையில் ஏதேனுமொரு இளைஞன் தன் அப்பா, அம்மாவிடம் சென்று " அப்பா, நான் நல்லதொரு அரசியல்வாதியாக வர விரும்புகிறேன். இதுதான் என் இலட்சியம்" என்று சொன்னால் . . . உடனே அப்பாவிடமிருந்து வரும் பதில் ". . . உருப்படறதுக்கு ஏதேனும் வழியப் பாரு. . அரசியலாம், அரசியல்.. உங்கொப்பன் என்ன கோடி கோடியா சொத்து சேத்தா வச்சிருக்கான் ? இல்லை நீதான் பெரிய அரசியல் தலைவரோட வாரிசா ? இதெல்லாம் நம்மளப் போல சாதாரணமானவங்களுக்கு ஒத்துவராது . . . போய் ஏதேனும் கம்பெனியில வேலை வாங்கி நாலு காசு சம்பாதிக்கற வழியப் பாரு ".&lt;/p&gt;&lt;p&gt;பற்றாக்குறைக்கு பக்கத்து வீட்டு, எதிர்த்த வீட்டுக்காரங்க, சொந்தக்காரங்க எல்லாம் வந்து பஞ்சாயத்து பண்ணி அந்த இளைஞனின் அரசியல் கனவை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. போதிய நடைமுறை அறிவு தரப்படாமை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கல்லூரிப் படிப்பை முடித்துவரும் மாணவ,மாணவிகள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள், பள்ளி, கல்லூரியில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். மொழிப்பாடங்களையும், கலை, அறிவியல் பாடங்களையும் ஓரளவிற்குக் கற்றுக்கொள்கின்றனர். ஆனால், மீதியுள்ள வாழ்நாள் முழுவதும்தான் வாழப்போகும்( அடுத்த ஒரு 60 ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோமே) இந்த சமூகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது; ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றத்திற்கு திட்டமிடவும், திட்டங்களை செயல்படுத்தவும் அதிகாரமும், நிதி ஆதாரமும் படைத்த அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது, அதில் அரசியல்வாதிகளின் பணி என்ன? தனது பங்களிப்பு என்ன? என்பது பற்றிய தெளிவு இல்லாதவனாகத்தான் வெளிவருகிறான் இன்றைய சராசரி இளைஞன். இது இளைஞனின் குற்றமல்ல. பாடத் திட்டத்தின், பாடம் எப்படி சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்பதில் உள்ள குற்றம். &lt;/p&gt;&lt;p&gt;ஆக, இந்த சமூகம் எப்படி இயங்குகிறது; அதில் அரசியலின் பங்கென்ன என்ற தெளிவில்லாத சராசரி இளைஞன் எப்படி அரசியலில் ஆர்வத்தோடு பங்கு பெற முன் வருவான் ?&lt;/p&gt;&lt;p&gt;அரசியலை இளைஞர்கள் வெறுத்து ஒதுக்குவதற்கான காரணங்களை கண்டோம்.காரணங்களைக் களைவது எப்படி ? என்று இளைஞர்கள் அரசியலை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்?&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. பெற்றோர்கள்,சமூக ஆதரவு:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;"அரசியல் ஒரு சாக்கடை". தன் மகன் அல்லது மகள் அந்தச் சாக்கடையை சுத்தம் செய்வதில் தங்களுக்கு விருப்பமில்லை என்று எண்ணியுள்ள பெற்றோர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். நம்மில் எத்தனை பேர் " நாடு இப்படிப் போகிறதே? இதை யார் சரிப்படுத்தப் போகிறார்கள்" என்று அக்கறைப் பட்டிருப்போம்? &lt;strong&gt;நல்ல தலைவர்கள் என்ன வானத்திலிருந்தா வரப்போகிறார்கள்? &lt;/strong&gt;நம்மைப் போன்ற பெற்றோர்கள்தானே நம் குழந்தைகளை முன்னுதாரணத் தலைவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும்? " சாக்கடை சீராக சென்று கொண்டிருந்தால் யாரும் கவலைப்படத் தேவையில்லை. அடைத்துக் கொண்டு நாற்றம் எடுக்கும்போது யாராவது சுத்தம் செய்துதானே ஆக வேண்டும். அது பிறர் வீட்டுக்குச் செய்யும் சேவை என்றெண்ணாமல், தன் வீட்டின் சுகாதாரமும் அதில் அடங்கியுள்ளதே என்று கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக ஓரளவு வசதியும், வாய்ப்பும் பெற்ற பெற்றோர்கள் நினைத்தால் தங்கள் மகனை, மகளை நல்லதொரு தலைவனாக வளர்த்தெடுக்க முடியும். அவர்கள் மேல் எந்த எண்ணத்தையும் திணிக்காமல், அவர்களுக்கே ஆர்வம் வரும்படியான வழிமுறைகளில் அவர்களைத் தூண்டி நாடு போற்றும் தலைவனாக வளர்த்தெடுக்க முடியும். அப்படி வளர்தெடுக்க விரும்பாவிட்டாலும், குறைந்த பட்சம் சுய ஆர்வத்தோடும், அறிவார்ந்த அணுகுமுறையோடும் அரசியலில் பங்கு பெற விரும்பும் தங்கள் மகன், மகளுக்கு முழு சுதந்திரமாவது கொடுக்க வேண்டும்.2. கல்லூரிகளில் - சமூக அறிவியல் பாடம்: தேர்தல்,அரசியல் கட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றங்கள், பாராளுமன்றங்களின் பணிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் பணிகள் போன்ற சமூக அறிவியல்-குடிமையியல் பாடங்கள் பத்தாம் வகுப்பு வரைதான் கற்றுத்தரப்படுகின்றன. கல்லூரிகளில் இந்தப் பாடங்கள் இல்லை. ஆராய்ந்து அறியும் வயதாகிய கல்லூரிப் பருவத்தில் இப் பாடங்களைக் கொடுப்பது, இளைஞர்களின் அரசியல் அறிவை வளர்ப்பதாக இருக்கும். பொறுப்புள்ள குடிமகனாய் செயல்படுவதற்கும், ஆர்வமிருப்பவர்கள் பொறுப்புள்ள தலைவர்களாக வருவதற்கும் இது நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். கல்லூரிகளில் மொழிப்பாடங்களை கட்டாயமாக வைத்திருப்பது போல், இந்தப் பாடங்களையும் ஏன் கட்டாயப் பாடமாக வைக்கக்கூடாது? கட்டாயப் பாடமாக வைப்பதன் நோக்கம் அதனைக் கற்றுத்தரும் முறையில்தான் பூர்த்தியாகும். ஆம், வழக்கம்போல் கேள்வி, பதில், மனப்பாடம் என்ற அடிப்படையில் இந்தப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்தால் எந்தவிதப் பிரயோஜனமும் இல்லை. சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு நடைமுறை உதாரணங்களோடு இந்தப் பாடங்கள் சொல்லித்தரப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. அரசியல் தலைவர்களை வளர்த்தெடுக்க ஒரு நிறுவனம்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பொதுவிவகாரங்களில் ஆர்வமும், ஆழ்ந்த அறிவுமுடைய; எதிர்காலத்தில் அரசியல் தலைவனாக வர விரும்பும் ஒரு இளைஞன் தன் அறிவையும், திறமையையும் மேம்படுத்திக் கொள்வதற்கு பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் ஏதுமில்லை.( புனேவில் இது போன்றதொரு நிறுவனம் இருப்பதாகக் பத்திரிக்கையில் பார்த்திருக்கின்றேன். ஆனால் அங்கு சென்று பணம் கட்டிப் படிப்பதற்கு நடுத்தர மக்களின் பொருளாதாரம் ஒத்துழைக்காது.) அப்படியொரு பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டு, பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சியளிக்கலாம். &lt;/p&gt;&lt;p&gt;மிகக்குறைந்த கட்டணத்தில், தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகவும் இந்த நிறுவனத்தில் அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படலாம். இந்த வகுப்புகளின் மூலம் மக்களின் சமூக,பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றியும், தற்கால அரசியல் நடைமுறைகளைப் பற்றியும், அரசியல் மூலம் எவ்வாறு சமூக,பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது பற்றியும் அங்கு பயிலும் மாணவர்களிடம் தெளிவை ஏற்படுத்தலாம். தேவைப்படும், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;படிப்பில் ஆர்வமில்லாத மாணவர்கள் சிலர், விளையாட்டில் விற்பன்னர்களாக இருப்பார்கள். அவர்களை விளையாட்டைக் கற்றுத் தரும் பள்ளிக்கு அனுப்பி அவர்களின் திறமையை ஊக்குவிப்பது போல், பொதுவிவகாரங்களில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து எதிர்காலத்திற்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ளலாம். இன்றைய அரசியல் நடைமுறைகளைக் கண்டு மனம் நொந்து, நல்லவர்கள், அறிவார்ந்த அணுகுமுறையுடையவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்களா என்று ஏங்கும், வசதி படைத்தோர் இந்த பயிற்சி நிறுவனத்திற்கு உதவி செய்ய முன்வரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இப்படி, பெற்றோர்களாலும், சமூகத்தாலும், பள்ளி, கல்லூரிகளாலும், பயிற்சி நிறுவனங்களாலும் வளர்த்தெடுக்கப்படும் ஒரு முக்கிய விஷயமாக அரசியல் மாறும்போது அறிவார்ந்த அணுகுமுறையுள்ள ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள் உருவாவார்கள். இவர்கள், புதிய அரசியல் கொள்கைகள், கலாச்சாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்வார்கள். அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பல்லாயிரம் இளைஞர்கள் அரசியலை நோக்கி வருவார்கள்; நாமெல்லாம் கனவில் தேடிக்கொண்டிருக்கும் நல்லாட்சியைத் தருவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;பின்குறிப்பு:வருடம் 2015:செய்தி: கோவையில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் பேராசிரியர் அப்துல்கலாம் மாணவர்களை நோக்கி உங்களில் யார் அரசியலில் ஈடுபட்டு நல்லதொரு தலைவராக வர விரும்புகிறீர்கள்? என்று கேட்டபோது, பெண்கள் உட்பட அனைத்து மாணவர்களும் கைதூக்கி ஆச்சயர்யப்படுத்தி, அசத்தினர்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-116430454348089012?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/116430454348089012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=116430454348089012' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/116430454348089012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/116430454348089012'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2006/11/blog-post.html' title='இளைஞர்களும் அரசியலும்...'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-115931709432396743</id><published>2006-09-26T17:27:00.000-07:00</published><updated>2006-09-26T17:31:34.333-07:00</updated><title type='text'>சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்.... புத்தக விமரிசனம்</title><content type='html'>&lt;strong&gt;நூலாசிரியர் :  சாவித்திரி கண்ணன் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம். துக்ளக் பத்திரிக்கையில் 1997 முதல் 2004 வரை சாவித்திரி கண்ணன் அவர்கள் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. மொத்தம் 67 கட்டுரைகள். மூன்றில் 2 பங்கு கட்டுரைகளை கல்வி, நீராதாரத் திட்டங்கள், அரசு அலுவலகங்களின் இலஞ்ச ஊழல்கள் என்ற மூன்று பிரிவுக்குள் அடக்கலாம். மீதியுள்ளவை மனித உரிமை மீறல்கள், விவசாயம், அரசியல் போன்ற சமூகப் பிரச்சனைகளை ஆராயும் கட்டுரைகளே.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரி,கிருஷ்ணா,வீராணம் போன்ற பெரிய நீராதாரத் திட்டங்கள் பற்றிய கட்டுரைகளை வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரைகள் என்பதை விட ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது விவசாயக் கல்லூரிகள் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகள் என்று அழைப்பதே பொருத்தம். அவ்வளவு அடர்த்தியான தகவல்கள், கள ஆராய்ச்சி, கடந்த கால வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. அதனால் படிப்பதற்கும் கொஞ்சம் கடினமாய் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்குமில்லை. ரஷ்ய நிறுவனம் இலஞ்சம் தர மறுத்ததால் கைவிடப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திர திட்டத்தால் பயனுமில்லை, சாத்தியமுமில்லை என்பதை விளக்கும் விரிவான கட்டுரைகளும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மாநகராட்சி பள்ளிக் கல்வி, நர்சரி பள்ளிக் கல்வி, கம்ப்யூட்டர் கல்வி, சட்டக் கல்வி, பொறியியற் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகம் போன்ற அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நடக்கும் இலஞ்ச-ஊழல்கள், பொறுப்பற்ற செயல்பாடுகள் போன்றவற்றை கிட்டத்தட்ட 15 கட்டுரைகள் மூலம் தோலுரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசியல் சாசனத்தின் 45வது பிரிவு, இந்த சாசனம் நடைமுறைக்கு வந்த 10 ஆண்டுகளில் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அளிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கிறது. அரசியல்சாசனம் நடைமுறைக்கு வந்து 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் 14 வயதிற்குட்பட்ட கோடிக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல்தான் உள்ளன. இவர்களில் பலர் குழந்தைத் தொழிலாளர்களாகவுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் சிலரின் பேச்சைப் படம் பிடித்துள்ள கட்டுரை "கொத்தடிமைத் தளையில் குழந்தைகள்"." காலைல 7 மணிக்கெல்லாம் தறி வேலை செய்யற எடத்துல இருக்கணும். சாயந்தரம் 7 மணி வரை செய்றேன். எனக்கு ஸ்கூலுக்குப் போக முடியலைனு வருத்தமா இருக்குதுனு" 9 வயது ஜெயலட்சுமி செல்றது நமது நெஞ்சை நெகிழ வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கட்டுரையிலும் அந்நியன் படத்தில் மாறுவது போல் நூலாசிரியர், வழக்கறிஞராக மாறி தான் எடுத்துக் கொண்ட கருத்தை ஒரு வழக்காகக் கருதி அதன் வாதி,பிரதிவாதிகள்,துறை வல்லுனர்கள்,பொதுமக்கள் போன்ற அனைவருடனும் கலந்துரையாடி, சில சமயங்களில் புலனாய்வு செய்து அதன் சாராம்சத்தை நடுநிலையோடு கட்டுரையாக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக, பழவேற்காடு ஏரியில், வடசென்னை அனல்மின் நிலைய ரசாயனக் கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய கட்டுரையில்(" மீள முடியாத நிலையில் மீனவர் வாழ்க்கை") பழவேற்காடு மீனவ சங்கத் தலைவர், அகில இந்திய மீனவ சங்கத் தலைவர், உள்ளூர் இளைஞர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மின் உற்பத்தி நிலையத் துறை வல்லுனர்கள்,மீன்வளத்துறை அமைச்சர் போன்ற சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும் கோர்த்து நல்ல கட்டுரையாக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அரிசியில் அடிக்கப்படும் கொள்ளை" கட்டுரையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல், பொதுவிநியோகக் கடைகளுக்கு அரிசியாக வரும்வரை நடக்கும் ஊழல்களைப் பற்றிப் படிக்கும் போது இதை வைத்து "ஒரு நெல்லின் பயணம்" என்ற புலனாய்வுப் படமே எடுக்கலாம் போல. அவ்வளவு ஊழல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏழையின் பட்ஜெட்" ஒரு வித்தியாசமான பட்ஜெட். ஒரு ரிக்ஷாக்காரரின் மாத வரவு செலவு பற்றியது. "பலியான மாணவன் பணத்திற்காகச் செய்யப்பட்ட ஆபரேஷன்", ரமணா படத்தை நினைவூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் அரசு அலுவலகங்களில் இலஞ்ச-ஊழல், பொறுப்பின்மைக்கா பஞ்சம். ஒவ்வொரு அரசு அலுவலமாக ஏறி அங்கு என்னதான் நடக்கிறது. எப்படித்தான் கொள்ளையடிக்கிறார்கள் என்று அறிந்து, உலகறியச் செய்ய துறைமுகம், கஸ்டம்ஸ், கால்நடைத்துறை, மாநகராட்சி அலுவலகம், தலைமைச் செயலகம் என்று பல இடங்கள் சுற்றி 'மக்களே....எப்படி இலஞ்சம் வாங்குகிறார்கள்" பாருங்கள் என்று "கரை புரண்டோடும் துறைமுக ஊழல்", "தற்குறி நிலைமையில் தலைமைச் செயலகம்", " கால்நடைத் துறையில் கூட்டுக் கொள்ளை", "மலைக்க வைக்கும் மாநகராட்சி ஊழல்" போன்ற கட்டுரைகள் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். அரசியல் தலையீட்டால், கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகள் நஷ்டமடைந்ததையும், கூட்டுறவுத் துறை வீட்டு வசதி திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததையும் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு நிறுவனங்களில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அரசு சாரா நிறுவனங்களில் நடக்கும் ஊழலைப் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னென்ன காரணங்கள் காட்டி இலஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது போல், எப்படியெல்லாம் செயல்பட்டால் இந்த இலஞ்ச, ஊழலை ஒழிக்கலாம் என்று தனியே ஒரு புத்தகம் வெளியிட ஆசிரியரைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. நாட்டில் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவோருக்கு, படம் பிடித்துக் காட்டுவோருக்குப் பஞ்சமில்லை. ஆனால் தீர்வு சொல்வார்தான் யாருமில்லை. நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகப் பிரச்சனையிலும் ஆழமான பார்வை கொண்ட நூலாசிரியருக்கு தீர்வு சொல்லும் தகுதி, திறமை உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;23-september-2006&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-115931709432396743?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/115931709432396743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=115931709432396743' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/115931709432396743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/115931709432396743'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2006/09/blog-post_26.html' title='சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்.... புத்தக விமரிசனம்'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-115931597470393556</id><published>2006-09-26T16:59:00.000-07:00</published><updated>2006-09-26T17:25:11.273-07:00</updated><title type='text'>மகா சக்தியும் மக்கள் சக்தியும்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6614/1142/1600/2rupee_rice_Edited.jpg"&gt;&lt;em&gt;செந்தில் ஆறுமுகம் &lt;/em&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் "இலவசங்கள்" அடை மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கிறது. "தமிழர் திருநாளாம் பொங்கலன்று தமிழர்கள் தன்மான உணர்வு &lt;a href="http://photos1.blogger.com/blogger/6614/1142/1600/color_TV_Edited.1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6614/1142/320/color_TV_Edited.1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;பெற்றிட" இலவச வேஷ்டி, சேலை."ரோட்டுக்கடை டீயை விடக் குறைந்த விலையில்" அரிசி. "பொதுஅறிவு பெற" வண்ணத் தொலைக்காட்சி. "விறகடுப்பு புகையில் கண்ணீர் சிந்தும் ஏழைத் தாய்மார்களுக்கு" இலவச கேஸ் மற்றும் சிலிண்டர். "டிராக்டர்கள் வாங்கி விவசாயம் செய்து வந்தவர்கள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும்" கூட்டுறவு வங்கி விவசாயக் கடன் தள்ளுபடி. விவசாயிகளுக்கு இருப்பது போல் நெசவாளிகளுக்கும் இலவச மின்சாரம். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் திருமண உதவித்தொகை ரூ.10000லிருந்து ரூ.15000ஆக உயர்வு. கர்ப்பிணி ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 6 மாதங்களுக்கு உதவித்தொகை. ஏழைக் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.500லிருந்து ரூ.1000ஆக உயர்வு, எல்லா சமுதாய மக்களுக்கும் இது வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/6614/1142/320/2rupee_rice_Edited.jpg" border="0" /&gt; வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூ.150-ரூ.300. "தமிழ் வளர்ச்சிக்காக தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு" வரிச்சலுகை. ( எனக்கு நினைவிற்கு வந்தது இவ்வளவுதான்.... இன்னும் பல இருக்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;அடேயப்பா... இலவசங்களைப் பட்டியலிடவே ஒரு புத்தகம் போட வேண்டும் போல. அடுத்து வரும் அரசாங்கங்கள் இலவசமாய்க் கொடுப்பதற்கு எதுவுமில்லையே என்ற கவலையில் "இலவசமாய் எதைக் கொடுக்கலாம்?" என்ற போட்டி நடத்தி புதிய "இலவசத் திட்டங்களைக்" கண்டுபிடிக்கக்கூடும் . யார் கண்டது....&lt;br /&gt;&lt;br /&gt;அரசின் வரிப்பணம் இப்படி அனாவசியமாகச் செலவிடப்படுகிறதே என்று உங்களைப் போல் எனக்கும் ஆதங்கம், ஆத்திரம் வந்தது. இதற்கு என்ன செய்யலாம் என்று நம்மில் பலர் யோசித்திருப்போம். அந்நியரின் "அடக்குமுறை" ஆட்சியை எதிர்த்தது போல் கடந்த பல ஆண்டுகளாய் நடந்த ஆட்சிகளின் "சலுகைச் சித்தாந்தங்களை" ஒழிக்க வேண்டும் என்று உங்களைப் போல் எனக்கும் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட இலவசங்கள், சலுகைகள், மானியங்களை எப்படி ஒழிப்பது ?&lt;br /&gt;&lt;br /&gt;இலவசங்களைக் கொடுக்காதே, மக்களை மயக்காதே, தமிழா..உன் தன்மானத்திற்கு இது அவமானம். என்று கோசம் போட்டுக் கொடி பிடிக்கலாமா என்றால் கேட்போர் யாருமில்லாமல் எத்தனை நாள்தான் கத்துவது....?&lt;br /&gt;&lt;br /&gt;இலவசங்களைக் கொடுக்காதே என்று அரசிடம் மனு கொடுக்கலாமா என்றால் தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பமுடியுமா.....?&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கலாமா என்றால் அரசின் "கொள்கை"(கொள்ளை என்று கூடப் படிக்கலாம்) முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொல்லிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரத் தன்மையுடையவர்கள் ஆக்ரோஷத்தோடு சொல்வார்கள், இலவசங்கள் தருவோரைச் சுட்டுவிடலாம் என்று. இலையைக், கிளையை ஒடிப்பதன் மூலம் மரத்தை வேரோடு சாய்த்து விடலாம் என்பது சாத்தியமா&lt;br /&gt;&lt;br /&gt;?அப்படியானால் நம்மால் எதுவுமே செய்யமுடியாதா? முடியும். நம்மால் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசத் திட்டங்களுக்கு எத்தனை ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்படுகின்றன. இந்தப் பணம் அரசுக்கு எப்படி வந்தது. இதனை எப்படியெல்லாம் முதலீடு செய்தால்... கவனிக்கவும் "முதலீடு செய்தால்",&lt;br /&gt;&lt;br /&gt;* மக்கள் தங்களின் பொருளாதாரத் தேவைகளையும், வளர்ச்சியையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;*பள்ளிகள்,கல்லூரிகள்,மருத்துவமனைகள்,சாலைகள்,குடிநீர்,தெருவிளக்குகள்,தொழில்கள் போன்ற பொதுக்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;மக்களிடம் நாம் எடுத்துச்சொல்லி நம்மால் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தால் இலவசத் திட்டங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்குப் பயனில்லாத எந்த "கவர்ச்சித்" திட்டங்களுக்கும் மக்களின் ஆதரவும் கிடைக்காது; ஓட்டும் கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது "இலவசங்கள் வேண்டாம்" என்று மக்களே சொல்லுமளவுக்கு அவர்களை மனமாற்றம் அடையச் செய்வதுதான் ஒரே வழி என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி.."இலவசங்கள் வேண்டாம்" என்ற மனமாற்றத்தை அடையச் செய்வது எப்படி? (இது ஒரு சிக்கலான, தமிழக ஏன் இந்திய அரசியலின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்க்கும் ஒரு முயற்சியாகும். இதில் எனக்குத் தோன்றிய ஒரு சிறு செயல்திட்டத்தை உங்கள் முன் விவாதத்திற்கும், சிந்தனைக்கும் வைக்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளை முள்ளால் எடுப்பது போல இலவசத் திட்டங்களில் ஒன்றான இலவச கேஸ் அடுப்பு, சிலிண்டர் இணைப்புத் திட்டத்திலேயே நம் செயல்திட்டத்திற்கும் கரு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"கேஸ் சிலிண்டர் மூலம் நம் செயல்திட்டத்தை செயலாய் (வெடிக்க) வடிக்க முடியும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/6614/1142/320/lpg-cylinder.jpg" border="0" /&gt;"வீடுகளுக்கு கொடுக்கப்படும் 14.2kg கேஸ் சிலிண்டர் ஒன்றின் உண்மையான விலை ரூ.420. ஆனால் நமக்கு விற்கப்படும் விலையோ ரூ.290. பற்றாக்குறையான ரூ.130 அரசு மானியம் மூலம் சரிகட்டப்படுகிறது. சாதாரண மக்கள் முதல் கோடிஸ்வரர் வரை பயன்படுத்தும் இந்த கேஸ் சிலிண்டர் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே விலையில் மானியத்துடன் வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசங்கள் தருவது, மானியம் தருவது போன்றவை சரியான கொள்கைகள் அல்ல என்று பேசுகிற நாம் அனைவரும் நமது வீடுகளில் நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இந்த மானியத்தைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு சிலிண்டரிலும் மானியமாக ரூ.130 பெறுகிறோம். பொருளாதார வசதியுள்ள, பொதுநலனில் அக்கறையுள்ள மக்கள் இதனைப் புறக்கணிப்பதன் மூலம் புதியதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த முடியும். மாதம் ஒரு சிலிண்டர் உபயோகப்படுத்தும் வீடுகளுக்கு இந்த புறக்கணிப்பு தங்கள் மாதச் செலவில் ரூ.130ஐத்தான் அதிகரிக்கும். இரண்டு மாதத்திற்கொரு சிலிண்டர் உயயோகிப்போருக்கு மாதச் செலவு அதிகரிப்பு ரூ.65தான். சமூக அக்கறையுள்ள, பொருளாதார வசதி படைத்தவர்கள் கோடிக்கணக்கான ஏழை மக்களின் நலம் கருதி இதனை விருப்பத்தோடு ஏற்று செயல்படுத்த முன்வருவார்கள் என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, ஒவ்வொரு கேஸ் சிலிண்டரிலும் தரப்படும் மானியமாகிய ரூ.130 எங்களுக்கு வேண்டாம் என்று மக்களைச் சொல்ல வைப்பதே நம் செயல்திட்டத்தின் முக்கிய அம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு, பொதுநலவாதிகள், சமூக சேவை நிறுவனங்கள், மக்கள் இயக்கங்கள் செய்யவேண்டியதென்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;கேஸ் சிலிண்டர் மானியத்தை புறக்கணிப்போம். சிலிண்டரை உண்மையான விலைக்கே வாங்குவோம், என்பது பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்கள் மாவட்டங்கள் தோறும் நடத்தி, யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் இணைய விரும்புகிறார்கள் என்ற தகவலைத் திரட்டி அரசிடம் முறையிட்டு உண்மையான விலைக்கு சிலிண்டர் வாங்க விரும்புவோர்க்கு அதற்கான வசதியைச் செய்துதருமாறு வற்புறுத்தலாம். ( பல்வேறு சட்ட சிக்கல்களைக் காரணம் காட்டி அரசாங்க அதிகாரிகள் தட்டிக் கழிப்பார்கள். மக்கள் சக்தியின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் எல்லா சட்டச் சிக்கல்களுக்கும் வழி கிடைக்கும். அந்த சட்ட சிக்கல்கள், அரசின் நடைமுறைகளுக்கு இப்போது போக வேண்டாம். இலட்சக்கணக்கான மக்கள், அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் திட்டமொன்றை முன்வைத்துப் போராடும்போது அரசு பணிந்துதான் ஆகவேண்டும்.)&lt;br /&gt;&lt;br /&gt;இத்திட்டத்தில் இணைந்தோர் பட்டியலைத் தொடர்ச்சியாக பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில், இணையத்தில் புகைப்படத்துடன் வெளியிடலாம். வித்தியாசமான செய்தியாதலால் நன்கு பரவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிச் செய்வதனால் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;1. மக்கள் "மானியங்கள் வேண்டாம்" என்கின்றனர் என்ற செய்தி ஊடகங்கள் மூலம் ஆட்சியாளர்களைச் சென்று சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. நமது செயல்திட்டம் செயல்படுத்தப்படும் வீரியத்தைப் பொருத்து ஆட்சியாளர்களின் "இலவசத் திட்டங்கள்" வரும் காலங்களில் குறையலாம்; நிறுத்தப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தேர்தல் அறிக்கைகள் மக்களின் வளர்ச்சி சார்ந்து இல்லாவிட்டால் ஆட்சிக்கு வர முடியாது; ஆட்சிக்கு வந்தபின்பு ஆட்சி கொள்கைகள் தேர்தல் அறிக்கையின்படி இல்லாவிட்டால் திரும்பவும் ஆட்சிக்கு வரமுடியாது என்ற சிந்தனை அரசியல் கட்சிகளிடம் விதைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஒத்த கருத்துள்ள மக்கள் சக்தியை ஒன்றிணைக்க முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;5. அடித்தட்டு, நடுத்தர மக்களிடம் "இலவசம் வேண்டாம்" என்ற மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடித்தட்டு,நடுத்தர பொதுமக்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம். உயர்-நடுத்தர,மேல்தட்டு மக்கள்தான் இதனை சாத்தியப்படுத்த முடியும். இவர்களின் பொருளாதார பலமும், கல்வியும், சமூக அக்கறையும், சமுதாய அந்தஸ்தும் இதுபோன்ற எளிமையான பொதுநலத் திட்டங்களில் தானாக முன்வந்து ஈடுபடத் தூண்டும். அதுவும் தகவல் தொழில்நுட்பத்துறை, தொழில்கள் பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ள தமிழகத்தில், இத்துறைகளில் பணிபுரிபவர்கள், குறிப்பாக இளைஞர்கள் ஆர்வத்தோடு ஒத்துழைத்து ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.நடுத்தர குடும்பங்களிலும் கொள்கைப் பிடிப்போடு வாழ்பவர்களும் முன்வரக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், இவ்வாறு இலட்சக்கணக்கான மக்களை "மானியம் வேண்டாம்" என்ற செயல்திட்டத்தில் சேர்த்து, ஊடகங்கள் மூலம் செய்தியைப் பரவலாக்க வேண்டும். பிறகு நாம், அடித்தட்டு, நடுத்தர மக்களிடம் இலவசங்கள், மானியங்கள் பற்றிய பிரச்சாரத்தை துவக்கவேண்டும். ஒவ்வோரு மட்டத்திலும் உள்ள மக்கள் தங்களுக்குத் தரப்பட்டுவரும் இலவசங்களை தாங்களே வேண்டாம் என்று சொல்லும் வரை தொடர்ந்து பணிபுரிய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் "Walk the Talk"( நீங்கள் சொல்வதை, செயலில் காட்டுங்கள்) என்பார்கள். இலவசத் திட்டங்கள் நாட்டின் பொருளாதரத்தை சீரழிக்கிறது. மக்களின் தன்மான உணர்வை, உழைப்பதற்கான உத்வேகத்தை குறைக்கிறது என்று ஆதங்கப்படும் நாம் இதுபோன்றதொரு செயல்திட்டத்தை எடுத்துக்கொண்டு களம் இறங்கினால்தான் விடிவு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;"இலவசங்கள்,மானியங்கள்,சலுகைகள் கொடுக்க வேண்டாம்" என்று சொல்வது, அதற்காக செயல்படுவது மட்டும் நமது இறுதி இலக்காக இருக்க முடியாது. இலவசங்கள் எதுவும் தரமாட்டோம்.அதோடு, வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்று ஒரு அரசு சொன்னால் விட்டுவிட முடியாதல்லவா... ஆக, இலவசங்கள் என்பது ஒரு அறிகுறி. அதுவே நோயல்ல. கை,கால் வலிக்கும்; இது அறிகுறி. ஆனால் உண்மையான நோய்க்குக் காரணம் ஏதாவது வைரஸ் கிருமிகளாகவிருக்கும். உண்மையான நோய் என்பது அரசியல் கட்சிகள் எந்தக் கொள்கைகளின் அடிப்படையில் ஆட்சி செய்கின்றனர் என்பதுதான். அரசின் கொள்கைகள் எனும் நோயை "இலவசங்கள்" போன்ற அறிகுறிகளின் மூலம் கண்டறிந்து மக்களிடம் எடுத்துச் சொல்வதும்; இந்த அறிகுறிகளையே நோயைச் சரி செய்யும் ஆயுதமாக்கும் ஒரு சிறு செயல்திட்டம்தான் மேலே முன்வைக்கப்பட்டது.நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்து, நோயைக்குணப்படுத்த விரும்பும் மக்களை ஒன்றிணைத்து, உரத்த குரலில் நம் கருத்தைச் சொல்வதுதான் நம் பணித்திட்டம். நோயைச் சரி செய்ய வேண்டிய மருத்துவர் "ஓட்டுக்கள் எனும் மகா சக்தியைக் கையில் வைத்துள்ள".... மக்கள் சக்தியே."&lt;br /&gt;&lt;br /&gt;20-september-2006&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-115931597470393556?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/115931597470393556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=115931597470393556' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/115931597470393556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/115931597470393556'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2006/09/blog-post.html' title='மகா சக்தியும் மக்கள் சக்தியும்'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-115684878598919835</id><published>2006-08-29T03:49:00.000-07:00</published><updated>2006-08-29T03:53:06.016-07:00</updated><title type='text'>விளாத்திக் குளங்களுக்குத்தேவை குளங்கள்</title><content type='html'>- செந்தில் ஆறுமுகம்&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தாலுக்காவிலுள்ள பல கிராமங்களைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. விளத்திக்குளத்திற்குச் செல்ல கோவில்பட்டியிலிருத்து ஒரு மணிநேரப் பேருந்துப் பயணம். சுமார் 30 நிமிட பயணத்திற்குப் பிறகு விளாத்திக்குளம் ஊர் வரும் வரை கண்களில் பட்ட காட்சிகள் என்னுள் பல கேள்விகளை எழுப்பின. கிட்டத்தட்ட 15 கி.மி தூரத்திற்கு வழியெங்கும் இருபுறங்களிலும் ஒரே "பசுமை". ஆனால் வேதனையான விஷயம் என்னவெனில் இத்த பசுமையைத் தந்து கொண்டிருந்தது அங்கிருந்த வேலிக்கருவை(இதனை "சீமைகருவேலை" என்றும் "வேலிக்காத்தான்" என்றும் அழைப்பர்கள்) முட்செடிகள்,மரங்கள்,!!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விசாரித்த போது சொன்னார்கள்,விளத்திக்குளம் தாலுக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 1000 ஏக்கர் வரை இந்த முட்செடிகள் தான் விவசாயம் என்று.என்னுள் கேள்விகள் பல எழுந்ததற்குக் காரணம் என்னவெனில், இந்த வேலிக்கருவை முட்செடி நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டவை.மேலும் இந்த செடியுள்ள இடத்திலிருந்து சில அடிதூரம் வரை மற்ற செடிகளை வளர விடாது என்று கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது. அது உண்மைதான் என்று உள்ளுர் மக்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி,இந்த முட்செடிகளை வைத்துக்கொண்டு அப்படி என்னதான் விவசாயம் செய்கிரார்கள் என்று விசாரித்தேன்.தண்ணீர் எதுவும் ஊற்றாமல் தானே வளரும் இந்த முட்செடிகளை 2 வருடத்திற்கு ஒருமுறை அறுவடை செய்வார்களாம்.வெட்டிய முட்செடிகளை எரித்து கரியாக்கி அந்தக் கரியை விற்பனை செய்கிறார்களாம். "காசைக் கரியாக்குவதை" கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு கரியைக் காசாக்கிக் கொண்டுள்ளார்கள்.1 ஏக்கர் நிலத்தில் வளரும் வேலிக்கருவையிலிருந்து 5 முதல் 6 டன் வரை கரி கிடைக்குமாம். ஒரு டன் கரி ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்குமாம்.1 ஏக்கரில் செடி வெட்டு கூலி போன்ற எல்லா செலவுகளும் போக கையில் நிற்பது கிட்டத்தட்ட் ரூ.1500 தானாம். அதாவது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு ரூ.1500 கிடைக்கிரது!! வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.750 வருமானம்!&lt;br /&gt;&lt;br /&gt;கரியைக் காசாக்கும் இத்த நடைமுறையை எப்படியெல்லாம் பார்க்கலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்தை பண்படுத்தாமல்,உரமிடாமல்,நாற்று நடாமல்,களையெடுக்காமல், பூச்சிமருந்து அடிக்காமல் மக்களுக்கு ஏதோ இந்த இந்தத் தொகையாவது கிடைக்கிறதே என்று பரிதாபப் பார்வை பார்ப்பது ஒருவகை.&lt;br /&gt;&lt;br /&gt; ஆண்டவன் அவர்களுக்குப் படியளந்தது அவ்வளவுதான் என்று தத்துவம் பேசுவது ஒருவகை.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணிர் வசதி இல்லை. அதனால்தான் நிலங்கள் இப்படி கிடக்கின்றன என்று சப்பைக் கட்டு கட்டி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வது ஒரு வகை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பார்வைகள் எதுவும் நம் முன்னேற்றத்திற்கோ,நாட்டு முன்னேற்றத்திற்கோ பயனளிக்காது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இத்தனை ஆண்டுகாலம் நாம் இப்படியே இருந்ததால்தான்; அந்த வறண்ட நிலங்கள் போல நாம் அணுகுமுறையிலும் வறட்சி இருந்ததால்தான் விவசாயம் நடக்க வேண்டிய நிலங்களில் முட்செடிகள் வளர்ந்து கொண்டிருக்கிறது. நம் நாட்டு அரசியல் போல! தரிசு நிலங்களை உருவாக்குவதில் வேலிக்கருவை முட்செடிகளின் பங்கு முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடத்தில் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள கட்சி அறிவிக்கும் ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் அளிக்கும் திட்டத்தைப் பற்றி ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.தேர்தல் வாக்குறுதியின் முழு வடிவமும் என்னவெனில்:" - தமிழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 55 ஏக்கர் தரிசு நிலங்களைப் பண்படுத்தி நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம்- புன் செய் நிலங்களையும் தரிசு நிலங்களையும் முறையான விளைச்சல் நிலங்களாக மாற்றிட நுண்ணிய நீர்ப்பிரி முகடு வேளாண்மை போன்ற (Miro Watershed management) புதிய தொழில் நுட்பங்களைக் கையாள்வதறகு வழிவகை காண்போம் "தரிசு நிலங்கள் பண்படுத்தி வழங்கப்படும் என்பதே வாக்குறுதி. அதாவது தற்போதுள்ள நிலங்களை அப்படியே கொடுத்தால் பயனில்லை என்பது தெளிவாகிறது."புதிய தொழில் நுட்பங்கள்" கையாளப்படும் என்றும் சொல்லப்பட்டது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய திட்டம்தான்;அணுகுமுறைதான்.இந்த 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை அரசு பண்படுத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? பண்படுத்திய நிலங்கள் பயன்பாட்டிற்கு வர எவ்வளவு காலம் ஆகும்? 2 ஏக்கர் கொடுக்கப்படுமா? கொடுக்கப்படாதா? என்ற துணைக் கேள்விகளை பின்னர் கேட்போம். தற்போது அதில் சிக்கி முக்கியக் கேள்வியை நாம் மறந்துவிடக்கூடாது.சரி அந்த முக்கிய கேள்விதான் என்ன?'&lt;br /&gt;&lt;br /&gt;அந்த 65 இலட்சம் ஏக்கர் நிலம் தரிசு ஆனதேன்?'&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது முக்கியக் கேள்வி தொடர்பான சில துணைக்கேள்விகளைக் கேட்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;* இதுவரை விவசாய ஆராய்ச்சிகளுக்கு அரசால் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? அதனால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு உயர்ந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;* கடந்த பல ஆண்டுகளில் மூடப்பட்ட, அசுத்தப்படுத்தப்பட்ட, ஆக்ரமிக்கப்பட்ட "பழைய தொழில் நுட்பங்களான" ஏரிகள், குளங்களின் எண்ணிக்கை எவ்வளவு?&lt;br /&gt;&lt;br /&gt;* கடந்த பல ஆண்டுகளில் திறக்கப்பட்ட அணைக்கட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?.&lt;br /&gt;&lt;br /&gt;*இதுவரை தரிசு நில மேம்பட்டுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் யாவை? செலவிடப்பட்டத் தொகை எவ்வளவு? அதன் பயங்கள் என்ன?.என்று கிராம நலனில்,நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்கள் கேள்வி கேட்க வேண்டும். படித்தவர்கள், அறிவாளிகள் கேட்க வேண்டும். விவசாய சங்கங்கள் கேட்க வேண்டும் குறிப்பாக அறிவும்,ஆற்றலும் ஒருங்கே பெற்ற இளைஞர்கள் கேட்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் மேற்சொன்ன அனைத்துத் தகவல்களையும் நாம் பெற முடியும். இத்தகைய தகவல்கள் கேட்கப்படும் போதுதான் அறிவிக்கப்பட்ட திட்டத்தை, கொள்கையை அமுல்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அக்கறை அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;விளாத்திக்குளத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலுள்ள எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார் அன்று பாடினார் :&lt;br /&gt;&lt;br /&gt;"வங்கத்தில் ஒடிவரும் நிரின் மிகையால்&lt;br /&gt;மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்!"&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இன்று தமிழகத்தை சுற்றிப்பார்த்தால்&lt;br /&gt;&lt;br /&gt;"உள்ளுரில் பெய்யும் மழை நீரையும்&lt;br /&gt;கடலில் கடக்கும் தண்ணீரையும்முதலில் சேமிப்போம்"&lt;br /&gt;&lt;br /&gt;என்று பாடியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.பெயரில் குளம் இருந்தாலும் ஊரில் வறட்சிதான். விளாத்திக்குளங்கள் முன்னேறத் தேவையானது பத்திரிக்கைகள், தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கப்படும் திட்டங்களல்ல. உள்ளூரில் நிலத்தில் தோண்டப்படும் குளங்கள் தான்.&lt;br /&gt;செந்தில் ஆறுமுகம்&lt;br /&gt;ஆகஸ்ட்- 2006&lt;br /&gt;&lt;br /&gt;வேலிக்கருவை தொடர்பான பிற தகவல்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. வேலிக்கருவை அழிக்க புறப்பட்ட திட்டங்கள்1996 - 2001 வரை ஆட்சி செய்த தி.மு,க. அரசாங்கம் ஒவ்வொரு 50 ஏக்கர் நிலங்களிலும் முள் எடுத்து சுத்தப்படுத்தி, அரசு செலவில் மண் ஆய்வு செய்து அதன் தன்மைக்கேற்ப மரக்கன்றுகள் என்று தருவோம் என்று தெரிவித்தது.2001 - 2006 வரை ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசாங்கம் பொறுப்புக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 10 லட்சம் ஏக்கர் நிலத்தில் இந்த முட்செடிகள் அகற்றப்படும் என்றும் முட்செடிகள் அகற்றப்பட்ட இடங்களில் மரக்கன்றுகளும், பழத்தோட்டங்களும் அமைக்கப்படும் என்று அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2. வேலிக்கருவை (அ) வேலிக்காத்தான் தழிழகத்துக்கு வந்தது எப்படி? பரவுவது எப்படி?1960களில் இந்த விதைகள் மெக்சிகோ, தென் அமெரிக்க நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு விமானம் மூலம் தமிழகத்தின் வறட்சியான பகுதுகளில் தூவப்பட்டது. அப்போது வளர்ந்த இச்செடிகள் அன்றைய தினம் எரிபொருளாகவும், கரி உற்பத்திக்கும் பயன்பட்டதென்னவோ உண்மை. ஆனால் இன்றைக்கு பல்வேறு விதமான கரிகள், எரிபொருட்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், இச் செடி அவசியமில்லாமல் போய் சுமார் 25 வருடங்களாகிவிட்டன. இந்த செடி பரவும் விதம் சுவாரசியமானது.இந்த முட்செடிகளின் காய்களை சாப்பிட்டு விட்டு ஆடுகள் போடும் புளுக்கைகள் மூலம் இது பல இடங்களில் வளர்ந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : சாவித்திரி கண்ணனின் "கண்டதும் கேட்டதும்"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-115684878598919835?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/115684878598919835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=115684878598919835' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/115684878598919835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/115684878598919835'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2006/08/blog-post_29.html' title='விளாத்திக் குளங்களுக்குத்தேவை குளங்கள்'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-115625004524509885</id><published>2006-08-22T05:33:00.000-07:00</published><updated>2006-08-28T03:27:01.510-07:00</updated><title type='text'>முதலமைச்சர் முருகன்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;செந்தில் ஆறுமுகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிகிறார் முருகன். வயது 40. தினமும் 12 மணி நேர வேலை. வாரத்தில் 7 நாளும் வேலை. மாதச்சம்பளம் ரூ.2000 !!! அப்பா இறந்துவிட்டார். நோயாளியான அம்மாவைக் கவனித்துக் கொள்ளவேண்டிய காரணத்தாலும், குடும்ப வறுமையின் காரணத்தாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்ப சூழலின் சோகங்கள் தன்னைச் சிறைபிடித்தாலும் நாட்டு நடப்பை கவனிப்பது, பலவகைப் புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் ஆர்வமுடையவர் முருகன். சமீபத்தில் எனக்கு அறிமுகமானார் இந்த நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;முருகன் போன்ற சாதாரணத் தொழிலாளிகள் மனத்தில் நாட்டு நடப்பைப் பற்றிய பார்வை எப்படி உள்ளது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் " நீங்கள் தமிழக முதல்வரானால் எந்த 3 திட்டங்களை முதலில் நிறைவேற்றுவீர்கள் ?" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது யோசனைக்குப் பிறகு சொன்னார். முதல் திட்டம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல். இரண்டாவது, இலஞ்ச ஊழலை ஒழித்தல். மூன்றாவது, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டு பூரண மதுவிலக்கு கொண்டு வரல்.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் பற்றி விரிவாய் விளக்குங்களேன் என்று கேட்டபோது மடைதிறந்த வெள்ளமாய்க் கொட்டினார் முருகன்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் தினந்தோறும் உபயோகிக்கும் பொருட்களையும் அதன் விலையையும் பட்டியலிட்டுக் காட்டி விலைவாசி எவ்வளவு உயர்ந்துவிட்டது பாருங்கள் என்றார். நான் முதல்வரானால் அடித்தட்டு மக்கள் உபயோகப்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒரு பைசா கூட அதிகரிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றுவேன் என்றார். தன் வருமானத்தின் பெரும்பகுதி அத்தியாவசியச் செலவுகளுக்கே சென்று விடுகிறது என்ற ஆதங்கத்தில் பேசினார் முருகன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து நடந்த உரையாடல்....&lt;br /&gt;&lt;br /&gt;விலைவாசி உயரக்கூடாது என்று விரும்புகிற நீங்கள், உங்கள் நிறுவனத்தில் பலவருடங்களாகியும் சம்பள உயர்வு தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சம்பளம் அதிகம் வேண்டுமானால் நல்ல சம்பளம் கொடுக்கும் வேறு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது நானே ஒரு சுயதொழில் தொடங்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குத்தான் ஆர்வமும் அறிவும் இருக்கிறதே பிறகென்ன ஒரு சுயதொழில் தொடங்கவேண்டியதுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் கையில் காசில்லை... வங்கியில்தான் தொழிற்கடன் வாங்க வேண்டும்.நல்லது.. ஏன் நீங்கள் முயற்சி செய்யக்கூடாது ?&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியில் எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் எங்கு லோன் கொடுக்கிறார்கள்? ஏதாவது சிபாரிசு அல்லது சொத்து இருந்தால்தான் லோன் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சரியான திட்டத்தோடு, தொடர்ந்து முயற்சி செய்தால் உங்களுக்கு லோன் கிடைக்க வாய்ப்புள்ளதே?&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் நிறையப் பேர் இப்படித்தான் சொல்றாங்க... ஆனால் வங்கிக்கு எங்களைப் போன்ற சாதாரண மக்கள் போனா முகம் கொடுத்தே பேசறதில்ல... பிறகெங்கு லோன் கேட்கறது ?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிச் சென்றது உரையாடல்.....சரி.. இப்ப இந்தப் பிரச்சனையை வேறு ஒரு கோணத்திலிருந்து பார்ப்போம். முருகன் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றுவேன் என்று சொன்ன முதல் திட்டத்தை திரும்பவும் ஆராய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்ன திட்டம் 'அரசானது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பது.' ஒரு அரசானது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் முதல் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களில், செயல்பாடுகளில் முதல் கவனம் செலுத்த வேண்டுமா? அடித்தட்டு மக்கள் உயிர்வாழத் தேவையான உணவுப்பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைப்பது என்பதை அரசின் ஒரு அடிப்படைக் கடமையாகக் கருதலாமே தவிர அதை ஒரு தொலைநோக்குத் திட்டமாகக் கருதமுடியாது. ஒரு பொருளை உற்பத்தி விலையைவிடக் குறைவாக விற்றால் நஷ்டம் ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அது பொருளாக இருந்தாலும், அரசாங்கத்தின் சேவையாக இருந்தாலும் விலையேற்றம் நடந்தால் உடனே கொதித்து எழுகிறோம். விலை குறைப்பு பண்ணச் சொல்லி ஆர்ப்பாட்டம், அணிவகுப்பு நடத்துகிறோம். அதே சமயம் நமக்கு சம்பள உயர்வு, சலுகைகளில் தாரளம் வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம். வருமானம் அதிகம் வேண்டும். ஆனால் பொருட்கள் மற்றும் அரசின் சேவைகள் குறைந்த விலைக்கு வேண்டும். இது எப்படிச் சாத்தியமாகும் ? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே ஒரு பிரச்சனையை ஆராய்ந்து தீர்க்க முற்படும்போது பிரச்சனையின் மூலம்(Root) என்று ஆய்ந்து அதனைத் தீர்க்க முற்பட வேண்டும். முருகன் உண்மையிலேயே விரும்புவது, 'விலைவாசிக் கட்டுப்பாடு அல்ல'. அவர் உண்மையில் விரும்புவது மகிழ்ச்சியான, இயல்பான வாழ்க்கை. நியாயமான ஆசை. ஆனால் இதற்கு அவருடைய வருமானம் போதவில்லை. வருமானத்தை அதிகரிக்க வழி தெரியவில்லை. உதவுவார், வழி காட்டுவோர் யாருமில்லை. இந்த குழப்பத்தில் 'விலைவாசி ஏற்றம்தான்' தன் குடும்ப மகிழ்ச்சியை சீர்குலைக்கிறது என்று முடிவெடுக்கிறார் முருகன். ஆழமாய் யோசித்துப் பார்த்தால் 'அத்தியாவசியப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு' மட்டும் முருகனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையத் தந்துவிடாது? மருத்துவம்,கல்வி,வீடு, வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், குடும்பத்தின் பொழுதுபோக்கு, பெற்றோர்களை கவனித்தல் போன்ற எத்தனையோ குடும்பத் தேவைகளை முருகன் சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் 'அத்தியாவசியப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு' தீர்வாகிவிடுமா? வேரை பிடுங்காமல் எத்தனை முறை கிளையை, இலையை வெட்டினாலும் பயனில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி... முருகன் போன்றோர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுதான் என்ன?முருகன் மற்றும் நாட்டிலுள்ள எல்லோரும் தன்னுடைய முழுமையான திறமைகளை வெளிப்படுத்தி &lt;strong&gt;தன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான தகுதிகளை வளர்த்தெடுத்து, முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும்&lt;/strong&gt;. தகுதிகளை வளர்த்தெடுப்பது என்பது கல்வி சார்ந்தது. முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவது என்பது விவசாயம் இலாபகரமான தொழிலாக மாறுவதற்கான கொள்கை முடிவுகள், சிறுதொழில் செய்ய, தொழிற்சாலைகள் தொடங்க முன்வருவோரை ஊக்குவித்தல், எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் உள்ளன என்ற தகவலை மக்களிடம் சென்று சேர்த்தல் போன்றவை அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி சார்ந்து யோசிக்கும்போது தமிழ்நாட்டில்தான் 248 பொறியியற் கல்லூரிகள், 215 மருத்துவம் சார்ந்த கல்லூரிகள்(மருத்துவ, துணை மருத்துவ கல்லூரிகள் உட்பட), 236 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 670 பிற கல்லூரிகள்(கலை அறிவியல், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல) உள்ளனவே என்று யோசிக்கத் தோன்றும்? உயர்கல்வியின் உண்மை நிலை அறிய தற்போது நடந்து கொண்டிருக்கும் சட்டசபைத் தொடரில் உயர்கல்வி அமைச்சர் முனைவர்.பொன்முடி, தனது துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பு அறிக்கையின் முதல் பக்கத்திலுள்ள தகவல் நமக்கு உதவும்..&lt;br /&gt;&lt;br /&gt;" நமது மாநிலத்தில் தகுதியுடைய இளைஞர்களில் 7 விழுக்காடு வரைதான் உயர்கல்வியைத் தொடரக்கூடிய நிலைமை உள்ளது. மேலை நாடுகளில் இந்த விகிதம் 80 விழுக்காடு வரை உள்ளது. 1976-77 ஆம் ஆண்டில் 1.5 விழுக்காடு என்ற நிலைமையில் இருந்த சீனா 2005 ஆம் ஆண்டில் 25 விழுக்காடு என்ற நிலைமைக்கு வந்துள்ளது. ஆகையால் தகுதியுடைய இளைஞர்களில் 7 விழுக்காடு வரைதான் உயர்கல்வியைத் தொடர முடியும் என்ற நிலையை மாற்றி 2020ஆம் ஆண்டிற்குள் 25 விழுக்காடாக உயர்த்திட இவ்வரசு பாடுபடும்"&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் உயர்கல்வி அமைச்சர் தமிழகத்தின் உயர்கல்வியின் நிலை குறித்து வெளியிட்ட அறிக்கை.பள்ளிப்படிப்பை(10 அல்லது 12) முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்கும் படிப்பைத்தான் உயர்கல்வி என்கிறோம். மேற்கண்ட அறிக்கையின்படி 100க்கு 7 மாணவர்கள்தான் உயர்கல்விக்குச் செல்கிறார்கள். மீதியுள்ள 93 பேரின் நிலை ? ? இதில் பலர், முருகன் போன்று வேலைக்காக வாழ்க்கையை அடமானம் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் எத்தனையோ இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உயர்கல்வி, குறிப்பாக தொழிற்கல்வியை கற்க விரும்புவோர் அனைவருக்கும் கல்வி வழங்க அரசானது போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் இந்த 93 பேர் கற்ற பள்ளிக் கல்வியாவது நடைமுறை வாழ்க்கைக்குப் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா என்றால், 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். எழுத, படிக்க, கணக்குப் போடத் தெரியும் இயந்திரங்களைத்தான் இன்றைய தொடக்கக் கல்வி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது. ஆங்காங்கு நல்லாசிரியர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் பெரும்பான்மையான மாணவர்கள் எழுத, படிக்க, கணக்குப் போடத் தெரியும் இயந்திரங்களாகத்தான் பள்ளியை விட்டு வெளிவருகிறார்கள்.  இதற்கு ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தை மற்றும் குறை சொல்ல முடியாது. பெற்றோர்களின் ஈடுபாடு,ஊடகங்களின் பங்களிப்பு(?) போன்ற பல்வேறு காரணங்கள் கொண்ட சிலந்தி வலைப் பிரச்சனை இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, பள்ளிக் கல்வி, உயர்கல்வியின் நிலை இது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, கல்வி கற்ற அனைவரும் சுயமாய் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இன்று எப்படியுள்ளன ? நாட்டின் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு மேல் ஈடுபட்டிருக்கும் விவசாயம் இலாபகரமான தொழில் இல்லை என்று முத்திரை குத்தியாயிற்று. பள்ளி, கல்லூரி படித்து முடித்து வருவோரில் மிகச் சிலரே விவசாயம் செய்ய முன் வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். விவசாயம் வளம் கொழிக்கும் தொழில் என்ற நிலையை அடைவதற்கான கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். சுயமாய் தொழில் தொடங்க வரும் இளைஞர்களை, குறிப்பாக கிராமத்து இளைஞர்களை அரவணைத்து, பயிற்சியளித்து வங்கிகள் கடனுதவியளிக்க வேண்டும். உலகளவில் தேவையான, நம்மூரில் தயாரிக்க வாய்ப்புள்ள பொருட்களைக் கண்டறிந்து தயாரித்து ஏற்றுமதி செய்யவேண்டும். ஆக, குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்தெடுப்பதும், சுயமாய் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுமே அரசின் முக்கியக் கடமையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் முடிந்து விடைபெறும்போது முருகனிடம் கேட்டேன்....இப்போது சொல்லுங்கள் நீங்கள் முதலமைச்சரானால் செயல்படுத்தும் முதல் திட்டம் "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதா?"&lt;br /&gt;இல்லை வேறு ஏதேனும் உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;" பள்ளிகள் வாழ்க்கைக்கான கல்வியைத் தரணும்.&lt;br /&gt;  வங்கிகள் வளர்வதற்கான வழியைத் தரணும்.&lt;br /&gt;  சொந்தக் காலில் நின்று - மக்கள் முன்னேறனும்...."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதுதான் நான் செயல்படுத்தப் போகும் முதல் திட்டம் என்றார்...... முதலமைச்சர் முருகன்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-115625004524509885?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/115625004524509885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=115625004524509885' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/115625004524509885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/115625004524509885'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2006/08/blog-post.html' title='முதலமைச்சர் முருகன்'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-114789211828071602</id><published>2006-05-17T11:40:00.000-07:00</published><updated>2006-05-17T12:00:12.063-07:00</updated><title type='text'>லோக் பரித்ரான் கட்சியின் மறுமுகம் -1</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6614/1142/1600/lok-paritran-split.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6614/1142/320/lok-paritran-split.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;strong&gt;லோக் பரித்ரான் கட்சியின் மறுமுகம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;( Click the image to enlarge it )&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;கட்சியின் கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;கட்சியில் குறிப்பிட்ட சாதியினருக்கு சிறப்பு மரியாதையளிக்கப்படுகிறது; பதவிகள் கொடுக்கப்படுகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கட்சியின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையில்லை;&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியில் சர்வாதிகாரப்போக்கு நிறைந்துள்ளது...... &lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;கட்சி மதச்சார்பற்றது என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் உண்மையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை........&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அட... நம்ம ஊர்ல எல்லாக் கட்சியுமே இப்படித்தானே நடக்குது. " இதைப்பத்தி நீ சொல்லித்தானா நாங்க தெரிஞ்சுக்க வேண்டி இருக்குனு நீங்க சொல்றது என் காதுல கேட்குது...."&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா.... மேற்சொன்ன 'சிறப்புத்' தகவல்களைச் சொன்னது, சமீபத்தில் தமிழகத்தில் விஜயகாந்துக்கு அடுத்தபடியாக அரசியல் அரங்கில், படித்தவர்கள் மத்தியில், குறிப்பாக சென்னை நகர மக்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய &lt;strong&gt;&lt;span style="color:#ff6666;"&gt;' லோக் பரித்ரான் '&lt;/span&gt; &lt;/strong&gt;கட்சி சார்பில் தேர்தலில் நின்றவர்கள் என்றால்............................................... எப்படி இருக்கும் உங்களுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;அதேதான்....அதேதான்.... எனக்கும்.... தலை சுற்றி.....&lt;br /&gt;'யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...." என்ற பழைய பாடல்தான்&lt;br /&gt;நினைவுக்கு வந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றே(16-05-06) இந்தச் செய்தி 'Deccan Chronicle' பத்திரிக்கையில் வந்துவிட்டது என்றாலும், இன்றுதான்(17-05-06) சென்னைப் பத்திரிக்கையாளர் பெருமன்றத்தில்( Chennai Press Club) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் 'லோக் பரித்ரான்' கட்சியின் சார்பில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் நின்று தி.மு.க, ம.தி.மு.கவிற்கு அடுத்தபடியாக, விஜயகாந்த், பா.ஜ.க போன்ற கட்சிகளையெல்லாம் ஓட்டு வரிசையில் பின்னுக்குத் தள்ளிவிட்டு 11665 ஓட்டுக்கள் பெற்ற திரு.ராஜாமணி(56), சேப்பாக்கம் தொகுதியில் தன் உயிரைப் பயணம் வைத்துப் போட்டியிட்டு 669 ஓட்டுக்களைப் பெற்ற திரு.இளந்திருமாறன்(38) , ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு 2459 ஒட்டுக்கள் பெற்ற இஷ்ராயில் மஹேஷ்வர்(31) ஆகியோர் சேர்ந்து பேட்டியளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி முதற்கொண்டு அனைத்துப் பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டுத்தான் இந்தப் பேட்டியை அளித்துள்ளனர். சின்னக் கட்சியிலேயே இவ்வளவு பிரச்சனையா ? அப்படி என்னதான் பிரச்சனைகள் என்று கேட்போமே என்று 'பிரஸ் கிளப்' சென்றிருந்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், இந்த மூவரும் பத்திரிக்கையாளர்களுக்குக் கொடுத்த ' press note ' அப்படியே உங்கள் பார்வைக்கு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;The Other face of lok paritran&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Lok paritan is supposed to be a national political party. The party had the attraction of using a premier instituion education, working abroad experience and sacrificing huge monthly income. It also envisages macro level improvements. This strong phenomena attracted lot of youth and educated mass.&lt;br /&gt;&lt;br /&gt;The National Executive declared this party as a secular and common for all walks of life proclaiming corruption free, transparent and better governance in the government with an approach to find a permanent solution to all the problems.&lt;br /&gt;&lt;br /&gt;But, none of these ideologies were followed within the party functionaries itself.&lt;br /&gt;They appear to be caste oriented hard cores. There is no transparent, participative management and democratic norms. They demonstrated strong-arm attitude,arrogance and dictatorship in the management.&lt;br /&gt;&lt;br /&gt;We humbly bring thte following findings to the press and media.&lt;br /&gt;&lt;br /&gt;1.No accounts were maintained by the party so far or not shown at least to the office bearers like the state president.&lt;br /&gt;&lt;br /&gt;2.There are no auditors to verify the accounts but there are legal advisors.&lt;br /&gt;&lt;br /&gt;3.In the absence of general body meeting, all appointments were made ad hoc basis inconsistently.&lt;br /&gt;&lt;br /&gt;3.Other than the founders,nobody is allowed to share their views and opinion as a democratic party. Only dictatorship is exercised.&lt;br /&gt;&lt;br /&gt;4.Complete bias and partiality shown towards candidates based on their origin.&lt;br /&gt;&lt;br /&gt;5.Double standard demonstrated in every aspect as no written procedure available for any deliberations.&lt;br /&gt;&lt;br /&gt;6.The party is not practically secular.&lt;br /&gt;&lt;br /&gt;7.There is no written policy constitution, procedures,rules and regulations.&lt;br /&gt;&lt;br /&gt;8.There is no organization defined and roles established for various positions&lt;br /&gt;&lt;br /&gt;9.The youth and the public are being mislead with the banner of high profile institution name.&lt;br /&gt;&lt;br /&gt;10.Utter implementation failure due to inefficiency,ineffectiveness, and inexperience&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டபோது...&lt;br /&gt;".... விரைவில் நாங்கள் வேறொரு தேசியக் கட்சியைத் தொடங்கவுள்ளோம். அதற்கு முன்பு உள்ளூரிலுள்ள சமூக அமைப்புகளோடு சேர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபட உள்ளோம்" என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேல் நடந்த பேட்டியில் என் 'சிற்றறிவிற்கு' எட்டிய விஷயங்கள் என்னவென்றால்:&lt;br /&gt;&lt;br /&gt;- கட்சியின் தேசியத் தலைமையும், தேசியத் தலைமைக் குழுவும் சர்வாதிகாரப் போக்குடன் நடந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;- அனைத்து வேட்பாளர்களும் அவர்கள் சொந்த பணத்தில்தான் தேர்தல் செலவுகளை சமாளிக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே அனைத்து வேட்பாளர்களுக்கும் சொல்லப்பட்டிருந்தாலும் 'மயிலாப்பூர்' தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருக்கு மட்டும் 'சிறப்பு கவனிப்பு'&lt;br /&gt;அளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;- தேர்தல் வந்துவிட்டது. உடனடியாக நிற்க வேண்டும். கட்சியின் சட்ட திட்டங்கள், நடைமுறைகளையெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்வோம் என்று இறங்கிவிட்டதால் ஒவ்வொரு நடைமுறையிலும் குழப்பங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;- இவர்கள் மூவரும் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு கட்சியின் தலைமை இனிமேல்தான் பதில் சொல்லும். இரண்டு பக்கத் தகவல்களையும் கேட்ட பின்பு ஒரு முடிவிற்கு வருவதுதான் சரி. ( ஆனால், இரண்டு முறை 'லோக் பரித்ரான்' அலுவலகத்திற்கு நேரில் சென்று அவர்களின் தேசியத் தலைவரிடம் பேசியதிலிருந்து இவர்கள் மூவரும் சொல்லும் தகவல்கள், குற்றச்சாட்டுக்களில் பெரும்பான்மையானவை உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து....)&lt;br /&gt;&lt;br /&gt;காரணங்கள் எதுவாக இருந்தாலும்... கட்சி உடைந்தது மிகவும் வருத்தத்துக்குரியது... இளைய தலைமுறை அரசியலில் தலையெடுக்கிறது. எனது மகன், மகளாவது படித்த இளைஞர்கள் நடத்தும் ஆட்சியில் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்கள் தலையில் இடி விழுவது போல்தான் இருக்கும் இந்தச் செய்தி...&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கட்டுரையில் 'லோக் பரித்ரான் கட்சி உடைந்தது' தொடர்பாக மேலும் பல விஷயங்களை எழுத முயற்சிக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் ஆறுமுகம்.&lt;br /&gt;17-05-06&lt;br /&gt;&lt;br /&gt;Email: kgsenthil@gmail.com&lt;br /&gt;Phone: 94431-19564&lt;br /&gt;&lt;br /&gt;More links:&lt;br /&gt;&lt;br /&gt;1. http://purohitexposed.blogspot.com/&lt;br /&gt;&lt;br /&gt;2. http://vkpedia.blogspot.com/2006/05/in-conversation-santhanagopalan.html&lt;br /&gt;&lt;br /&gt;3. http://www.unmaionline.com/20060501/par.htm&lt;br /&gt;&lt;br /&gt;4. http://www.lokparitran.org&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-114789211828071602?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/114789211828071602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=114789211828071602' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/114789211828071602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/114789211828071602'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2006/05/1.html' title='லோக் பரித்ரான் கட்சியின் மறுமுகம் -1'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-114776483215228094</id><published>2006-05-16T00:23:00.000-07:00</published><updated>2006-05-16T01:09:39.726-07:00</updated><title type='text'>MLAவும் தொகுதிசபையும்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6614/1142/1600/May2006-MLA-Thoguthi-Sabhai-1of2.0.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6614/1142/320/May2006-MLA-Thoguthi-Sabhai-1of2.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6614/1142/1600/May2006-MLA-Thoguthi-Sabhai-1of2.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6614/1142/1600/May2006-MLA-Thoguthi-Sabhai-2of2.0.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6614/1142/320/May2006-MLA-Thoguthi-Sabhai-2of2.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6614/1142/1600/May2006-MLA-Thoguthi-Sabhai-2of2.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6614/1142/1600/May2006-MLA-Thoguthi-Sabhai-2of2.jpg"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-114776483215228094?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/114776483215228094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=114776483215228094' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/114776483215228094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/114776483215228094'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2006/05/mla.html' title='MLAவும் தொகுதிசபையும்'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-114775775242336771</id><published>2006-05-15T22:34:00.000-07:00</published><updated>2006-05-15T22:54:30.943-07:00</updated><title type='text'>நாட்டின் இன்றைய நிலை என்ன?</title><content type='html'>&lt;strong&gt;1. நாட்டின் இன்றைய நிலை என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.1. அரசு பணிகள், சேவைகளில் தரமின்மை; அரசு அலுவலகங்கள், திட்டங்களில் லஞ்சம்,ஊழல், காலதாமதம்,நடைமுறைகளில் எளிமையின்மை போன்றவற்றை அரசாங்கத்தின் பிரிக்கமுடியாத கூறுகள் என்பதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டோம். குறிப்பாக அரசியல்வாதிகளின் போலித்தன்மையையும், பொறுப்பின்மையையும், சுயநலச் செயல்பாடுகளையும் சகித்துக் கொள்ளப் பழகிக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1.2.அரசாங்கமே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். எங்கள் பணி வேடிக்கை பார்ப்பதும்,விமர்சனம் செய்வதும் மட்டுமே என்ற மனோபாவம் பெரும்பான்மையான மக்களின் மனத்தில் ஆழ வேரூன்றிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1.3.சின்னத்திரை,சினிமா,அர்த்தமில்லாத-அரட்டை அரசியல் போன்றவற்றில் தேவைக்கதிகமான ஈடுபாட்டைக் காண்பிக்கிறோம்; நேரத்தைச் செலவிடுகிறோம்; திரை நட்சத்திரங்களை வானத்து நட்சத்திரங்களாகப் பாவித்து வியந்து,போற்றி வணங்குகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;( அப்படி என்றால் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லவில்லையா ? நாட்டின் பொருதாரம் பெருகவில்லையா? இலட்சக்கணக்கான கணிப் பொறி வல்லுனர்களுக்கு வேலை கிடைத்துள்ளதே இது எதைக் குறிக்கிறது? என்ற கேள்விகள் நியாயமானவையே..... நம் கவனம், அக்கறை எல்லாம், மேற்சொன்ன பிரச்சனைகளையும், சிக்கல்களையும் வைத்துக் கொண்டே நம்மால் இவ்வளவு முன்னேற்றமடைய முடியும் போது, அந்தப் பிரச்சனைகளையும், சிக்கல்களையும் தீர்ப்பதன் மூலம், சீர்திருத்தம் செய்வதன் மூலம் நாம் எவ்வளவு முன்னேற்றமடைய முடியும் என்பதுதான். Our work is ' Expediting the Progress.... In other words ' Removing the hurdles for development.'. )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. இதன் விளைவுகள்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.1.கோடிக்கணக்கான மக்கள் அடிப்படை வசதியின்றி வறுமையில் வாழ்கின்றனர். தங்கள் கண்மணிகளான குழந்தைகளை படிக்கும் வயதில் வேலைக்கு அனுப்பிக் கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2.2.பள்ளி,கல்லூரிகள், தொழிற்பயிற்சிக் கூடங்கள் நம்முள் இருக்கும் தனித்திறன்களை மேம்படுத்த உதவாததால், கற்ற கல்வி நடைமுறை வாழ்க்கைக்கும் உதவவில்லை; சுயதொழிலுக்கும் நம்மைத் தயார்படுத்தவில்லை; இருக்கின்ற வேலைகளுக்குத் தேவையான தகுதிகளையும் தரவில்லை. இதனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கை கிடைக்காமல் சராசரி வாழ்க்கைக்குத் தள்ளப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2.3.நாட்டின் ஆதாரத் தொழில்களான விவசாயம், சிறு தொழில்கள் போன்றவை லாபம் தரும் தொழில்கள் இல்லை என்ற நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது. சிறு,குறு விவசாயிகள் கடன் தொல்லையால் அவதிப்படுவதும், நகரங்களுக்கு இடம் பெயருவதும்; சிறுதொழிற் கூடங்கள் மூடப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2.4.புதிய புதிய ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் பட்டம் பெறுவதற்கான சடங்குகளாவும், அலுவலக வேலையாகவும் உள்ளனவே தவிர தனிமனித வளர்ச்சிக்கோ அல்லது நாட்டின் வளர்ச்சிக்கோ உதவுவதாக இல்லை.3. இந்த அவலநிலையை மாற்ற முடியாதா? 'முடியும்' என்ற நம்பிக்கை வைப்பதே மாற்றத்திற்க்கு முதல் படி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சரி நாம் எடுத்து வைக்க வேண்டிய முதல் படிதான் என்ன?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;' என்னுடைய முன்னேற்றத்தையும், ஒட்டு மொத்த சமூகத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு :&lt;br /&gt;&lt;br /&gt;' &lt;strong&gt;நேர்மை நெறிகளோடு வாழ்க்கை நடத்துவேன்; நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்வேன் என்ற சங்கல்பமும்&lt;/strong&gt;(மன உறுதியும்)- ஜனநாயக அமைப்பைச் சரியாகப் புரிந்து கொண்டு &lt;strong&gt;பார்வையாளர் என்ற நிலையிலிருந்து முன்னேறி பங்கேற்பாளர் என்ற நிலையில் செயல்படுவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவேன் என்ற நிலைப்பாடும்தான்&lt;/strong&gt;....." நாம் எடுத்து வைக்க வேண்டிய முதல்படி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. என்ன செய்யலாம் ?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நல்லதொரு சமுதாய, அரசியல் மாற்றம் வராதா என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். எந்தவொரு சமுதாய, அரசியல் மாற்றமும் ஒத்த எண்ணமுள்ள மக்களின் கூட்டுமுயற்சியால்தான் சாத்தியமாகும். அப்படிப்பட்ட ஒத்த எண்ணமுள்ள மக்களின் கூட்டுமுயற்சிக்கு ஒரு தளம்(platform/organisation) அவசியம். இந்த தளத்தை அடிப்படையாக வைத்து ஒத்த எண்ணமுள்ள நாமனைவரும் இணைந்து இயங்குவது அதைவிட அவசியம். இந்த தளத்தை இப்போதைக்கு ' மக்கள் இயக்கம்' என்று அழைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5. மக்கள் இயக்கத்தின் நோக்கம் ? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரபலமும், நேர்மை நெறிகளும், சமூக நீதியுமுடைய சமுதாயமாக நமது நாடு மாற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு ' இலஞ்ச-ஊழலற்ற(Corruption free)&lt;br /&gt;திறமையான( Efficient)&lt;br /&gt;வெளிப்படையான,(Transparent)&lt;br /&gt;மக்கள்-நண்பனான(People Friendly)&lt;br /&gt;மக்களை வளர்ச்சியடையச் செய்வதிலும்( Development oriented)&lt;br /&gt;சுயச்சார்படையச் செய்வதிலும் அக்கறையுள்ள, ( Empowerment/self-reliant oriented)&lt;br /&gt;மக்கள் பங்கேற்புள்ள ( People participative )&lt;br /&gt;அரசு மிக அவசியமாகிறது. ( Government )&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட ஒரு அரசை அமையச் செய்வதுதான் மக்கள் இயக்கத்தின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6. மக்கள் இயக்கத்தின் அணுகுமுறை?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;6.1 உள்ளாட்சி மன்றங்களை வலுப்படுத்துதல்&lt;br /&gt;&lt;br /&gt;6.2 சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் முறையாகச் செயல்படுத்தப்பட வழிவகுத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;6.3 விவசாயம், கல்வி, தொழில் போன்ற முக்கியமான துறைகளின் வளர்ச்சி குறித்த மக்களின் பார்வையையும், அணுகுமுறையையும், திட்டங்களையும் வெளிக்கொணர்தல், தொகுத்தல், பரவச்செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;6.4 அரசியல் கட்சிகள், தேர்தல், அரசு அலுவலகங்களின் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படவும், திறமையுடையதாக்கவும் தேவையான சிந்தனைகளையும்,  திட்டங்களையும் மக்களிடமிருந்து திரட்டுதல், அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்தச் சிந்தனைகளைப் பரப்புதல்.&lt;br /&gt;&lt;br /&gt;6.5 மக்களின் நல்வாழ்வை, வளர்ச்சியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும் நிகழ்வுகள் நடக்கும்போது அந்த நிகழ்வைப் பற்றிய முழுவிவரங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்துதல்; பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நியாயத்திற்கும் துணைநிற்றல்.&lt;br /&gt;&lt;br /&gt;6.6 மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் பற்றிய சமூகத் தணிக்கைக்கு(Social \naudit) ஏற்பாடு செய்தல்&lt;br /&gt;&lt;br /&gt;6.7 பத்திரிக்கை நடத்துதல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7. மக்கள் இயக்கத்தின் செயல் திட்டங்கள் ?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;u&gt;7.1 உள்ளாட்சி மன்றங்களை வலுப்படுத்துதல்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7.1.1 உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பங்கேற்பை அதிகரிக்கச் செய்தல்&lt;br /&gt;7.1.2 உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரங்களையும், நிதி ஆதாரங்களையும் அதிகரிக்கச் செய்தல்&lt;br /&gt;7.1.3 உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு தகுந்த பயிற்சி அளித்து அவர்களின் சீரிய செயல்பாட்டுக்கு துணைநிற்றல்&lt;br /&gt;7.1.4 கிராம ஊராட்சிகள் தவிர்த்து மற்ற உள்ளாட்சி மன்றங்களில்( சிறப்பு கிராம ஊராட்சிகள், நகர பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள்) 'கிராம சபைக்கு' ஒப்பான 'மக்கள் பங்கேற்புக்' கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்துதல், மக்களிடம் சிந்தனையைப் பரப்புதல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;7.2. சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் முறையாகச் செயல்படுத்தப்பட வழிவகுத்தல்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7.2.1 MLA, MP க்களின் உண்மையான பணிகள் என்ன என்பதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரவச்செய்தல்&lt;br /&gt;&lt;br /&gt;7.2.2 MLA, MP க்கள் சிறப்பாகச் செயல்பட உதவுதல், ஒத்துழைத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;7.2.3 MLA, MP யின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லல், விமரிசித்தல்&lt;br /&gt;&lt;br /&gt;7.2.4 MLA, MP க்கள் மக்களை சந்திக்கும்படி நிர்பந்தித்தல். குறிப்பாக சட்டசபைக்குச் செல்லுமுன்னரும், சட்டசபை முடிந்த பின்னரும்&lt;br /&gt;&lt;br /&gt;7.2.5 தேர்தல் காலங்களில் MLA, MP க்களின் செயல்பாடுகளை நடுநிலையோடு மதிப்பிடல், விமரிசித்தல்&lt;br /&gt;&lt;br /&gt;7.2.6 MLA, MP களுக்குக் கொடுக்கப்படும் 'தொகுதி வளர்ச்சி நிதி' எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மக்கள் அறியச் செய்தல்.  'தொகுதி வளர்ச்சி நிதி' தேவையா என்பது பற்றிய விவாதத்தை ஏற்படுத்துதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;7.3 சமுதாய வளர்ச்சி குறித்த மக்களின் பார்வையையும், அணுகுமுறையையும், திட்டங்களையும் வெளிக்கொணர்தல், தொகுத்தல், பரவச்செய்தல் மற்றும் அரசாங்கத்திடம் முன்வைத்தல்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7.3.1 விவசாயம், கல்வி, தொழில் போன்ற துறைகளில் அனுபவமுள்ளவர்கள், அதிகாரிகள் மற்றும் அந்தந்தத் துறைகளின் அமைச்சர்களும் பொதுமக்களும் சந்தித்து விவாதிக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடத்தி அதன் மூலம் அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கான சிந்தனைகளையும், திட்டங்களையும் திரட்டி, மக்களின் சார்பில் அரசாங்கத்திடம் முன்வைப்பது. அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்தச் சிந்தனைகளைப் பரப்புதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;7.4 அரசியல் கட்சிகள், தேர்தல், அரசு அலுவலகங்களின் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படவும், திறமையுடையதாக்கவும் தேவையான சிந்தனைகளையும், திட்டங்களையும் மக்களிடமிருந்து திரட்டுதல், அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்தச் சிந்தனைகளைப் பரப்புதல்.&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7.4.1 இலஞ்சம், ஊழலுக்கு வழிவகுக்கும் அரசியல் கட்சிகளின் நடைமுறைகள், தேர்தல் நடைமுறைகள், அரசு அலுவலகங்களின் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட, சீர்திருத்தப்படத் தேவையான சிந்தனைகளையும், திட்டங்களையும் மக்களிடமிருந்து திரட்டி, மக்களின் சார்பில் அரசாங்கத்திடம் முன்வைப்பது. அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்தச் சிந்தனைகளைப் பரப்புதல்.&lt;br /&gt;&lt;br /&gt;7.5 மக்களின் நல்வாழ்வை, வளர்ச்சியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும் நிகழ்வுகள் நடக்கும்போது அந்த நிகழ்வைப் பற்றிய முழுவிவரங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்துதல்; பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நியாயத்திற்கும் துணைநிற்றல்.&lt;br /&gt;&lt;br /&gt;7.6 மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் பற்றிய சமூகத் தணிக்கைக்கு(Social audit) ஏற்பாடு செய்தல்&lt;br /&gt;&lt;br /&gt;7.6.1 சமூகத் தணிக்கைக்கு என்பது மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் நிகழ்வு . திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் இது உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;7.7 பத்திரிக்கை நடத்துதல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை எப்படி மக்களிடம் எடுத்துச் செல்லப்போகிறோம் ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8.1. இணையத்தளப் பத்திரிக்கை&lt;br /&gt;8.2. பத்திரிக்கை ( print magazine )&lt;br /&gt;8.3. கலைக்குழுக்கள் மூலம்&lt;br /&gt;8.4. குறும்படங்கள் திரையீடு&lt;br /&gt;8.5. விழிப்புணர்வுக் கூட்டங்கள்&lt;br /&gt;8.6. விழிப்புணர்வுப் பிரசுரங்கள் வெளியீடு&lt;br /&gt;8.7. மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தல் ( துறை சார்ந்த சிந்தனை, விவாதத்திற்கான கூட்டம் )&lt;br /&gt;8.8. பத்திரிக்கைகளுக்குக் கட்டுரை எழுதுதல்&lt;br /&gt;8.9. இணையதளம்&lt;br /&gt;8.10 ஈ-மெயில் Groups&lt;br /&gt;8.11. கருத்தரங்குகள்&lt;br /&gt;8.12. பள்ளி, கல்லூரிகளில் கூட்டங்கள் நடத்துதல்&lt;br /&gt;8.13 நடை பயணங்கள்&lt;br /&gt;8.14 உண்ணாவிரதம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு நிதி ஆதாரம் ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9.1. பத்திரிக்கையின் சந்தாதாரரை அதிகரித்தல்&lt;br /&gt;9.2. இயக்கத்தின் உறுப்பினர்களை அதிகரித்தல்&lt;br /&gt;9.3. நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடத்துதல்&lt;br /&gt;9.4. ஒத்த கருத்துடைய தொழிலதிபர்கள், நிதி வசதி உடையோரிடமிருந்து நன்கொடை பெறுதல்&lt;br /&gt;9.5. இயக்கத்தின் பிரசுரங்கள், குறும்படங்கள் மூலம் நிதி திரட்டுதல்&lt;br /&gt;&lt;br /&gt;- செந்தில் ஆறுமுகம், நந்தகுமார், சிவசங்கர்&lt;br /&gt;10-05-2006&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-114775775242336771?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/114775775242336771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=114775775242336771' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/114775775242336771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/114775775242336771'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2006/05/blog-post.html' title='நாட்டின் இன்றைய நிலை என்ன?'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-112931480925605351</id><published>2005-10-14T11:29:00.000-07:00</published><updated>2006-05-16T01:15:37.196-07:00</updated><title type='text'>விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி துவக்க மாநாடு</title><content type='html'>Dear Friends,&lt;br /&gt;&lt;br /&gt;On Sep 14th I was in Madurai to witness Vijayganth's party launch.&lt;br /&gt;Here is a report about the grand function.&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------&lt;br /&gt;Those who have already read enough news about it can just have a look at the&lt;br /&gt;photos:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="http://photos.yahoo.com/kgsenthil" href="http://photos.yahoo.com/kgsenthil"&gt;http://photos.yahoo.com/kgsenthil&lt;/a&gt;&lt;br /&gt;Album name:  Vijayganth-Party-Launch&lt;br /&gt;&lt;br /&gt;Note: click on the photos to see enlarged picture.&lt;br /&gt;---------------------------&lt;br /&gt;&lt;br /&gt;CHENNAI to THOOPUR:&lt;br /&gt;&lt;br /&gt;I've reached Madurai railway station at 06:30am on Sep 14th. I was on the thought that the meeting will start in the evening only. After seeing the newspaper, I came to know that the program starts at 7:16am itself with the flag hoisting by Vijayganth. I thought, there may be pickup shuttle vehicles from railway station to the venue. There was nothing like that. I was told to catch a bus that goes via Thiruparangundram. Time is now 07:45am. There is&lt;br /&gt;not much crowd in the bus stand. Looks like all "thondars" were sincerely reached the meeting ground(thopur) at 07:16 itself!!. Met a group of youths with "karai veshti" and "thundu". Later came to know that they are from Coimbatore(Enga ooru kaaranghoi...). Again no pickup vehicles from bus stand.&lt;br /&gt;&lt;br /&gt;Reached the meeting ground at 08:30am. Since this is the first "Maanadu" that I am attending, I went with "bayabakthi" and thrilling in mind. In that thrilling I've missed to go via the front gate and reached the backgate. I was told that the entry ticket fee is Rs.5 and it's to be collected in the front gate. "Aaarambame sari illayenu kavalayoda ninnu kittu irundhen..." That "responsible" security man offered me a "backdoor techique". It's nothing but our 'regular process' in the government office. The security man allowed me to get in without ticket but with the tip of Rs.5 to his own pocket. ( Nammale ippadi pannalaamaanu Manasu ketkaama, again I went back to front gate, paid Rs.5 and collected a ticket.&lt;br /&gt;&lt;br /&gt;It's 08:45am. Later I came to know that due to overcrowd, they were not able to continue the collection of Rs.5 and allowed everybody for free.). It's good that I haven't reached the meeting ground earlier. Because the 100's of pairs of chappels lying in the entrance showed the crowd and cracyness in the early morning.( See the picture in the album &lt;a href="http://photos.yahoo.com/kgsenthil"&gt;http://photos.yahoo.com/kgsenthil&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;PARTY NAME ANNOUNCED AT 09:40am:&lt;br /&gt;&lt;br /&gt;For first 15 mins I was not able to identify the stage. It's too far from the place where I was sitting. I was assuming that the stage was in one direction. But it was not. Only "press",special guests,"ladies" and "rasigar mandra nirvagigal" were able to get a close look of the stage. Others were able to watch the programs in TVs and LCD screens only. It's a real big "pandal" which can accomodate around 2.5lakh of people.&lt;br /&gt;&lt;br /&gt;All the speakers came till 9:30am boasted about Vijayganth's "veera Dheera Paraakiramangal" in film stunts and "vallal gunam" in hosting the co-workers with food.&lt;br /&gt;&lt;br /&gt;Vijayagantham started his talk at 09:30am. It's just a 15 mins talk only. Just announced the party name and told that he'll talk in detail in the evening. DMDK(Desiya Murpokku Dravida Kazhagam) is the name of his party.( When I was travelling from bus stand to the meeting venue, I was assuming that the words like "tamil" "dravida" "kazhagam" will be there for sure&lt;br /&gt;in his party name. It is to be noted that just 2 weeks before the launch, vijayganth's interview in "thuglak" told the "desiyam enbadhe emaatru velai...". But somehow or somebody convinced him to add the word "desiya" in his party name.)&lt;br /&gt;&lt;br /&gt;Starting from 09:45am to evening 06:50pm, there were no interesting things happened. Talk by District presidents of "Rasigar mandram", a "paatu mandram" and blind people's music program were the fillers.&lt;br /&gt;&lt;br /&gt;A Contradiction &amp; Good initiative:&lt;br /&gt;&lt;br /&gt;Contradiction:  In the middle of the meeting it was announced, NDTV calculated that there were 20 lakh people are there in the meeting. Junior vikatan calculated it as 23 lakhs. It was announced in the morning. At that time, my guess is around 2.5 lakh only.&lt;br /&gt;&lt;br /&gt;Good initiative: Contract for cleaning the meeting ground was given to EXNORA. Cleaning was keep on going along with the meeting. Workers were given Rs.150/day for day work alone. Or Rs.275/day for staying in the meeting ground in night.&lt;br /&gt;&lt;br /&gt;INTERVIEW:&lt;br /&gt;&lt;br /&gt;To find the mindset of a Rasigar mandram, I got into a Van and asked for their interview.&lt;br /&gt;They are from Vilupuram district. It's "Captain Vijayganth Rasigar Mandram", Kandamangalam Union, kalinjikuppam village.&lt;br /&gt;&lt;br /&gt;From the interview( You can see their group photo, in the album http://photos.yahoo.com/kgsenthil)&lt;br /&gt;&lt;br /&gt;- 15 people came in the van with each one's contribution as Rs.300. Apart from&lt;br /&gt;that they've pooled some more money to place digital banner ad. Again and again I asked whether they've spent their own money or it was given. They told it's their own money. Asked the same with some other group also, the reply was the same.&lt;br /&gt;&lt;br /&gt;- Except 2 persons, all were below 30 years.&lt;br /&gt;&lt;br /&gt;- Ladies from their family were also interested in attending the meeting. But it will be inconvenient for them, so they've left them in home. In the lunch time, they got calls from their home and enquired whether the food given to them was sufficent and also asked about the meeting details.&lt;br /&gt;&lt;br /&gt;- Most of them wored "karai veshti" and "thundu" for the first time in their life time. They were proud of that. (Since his "Rasigar mandram's" flag was reused as party's flag. Ahead of announcing the party, the "thondars" were able to purchase the dhotis and towels with border of party flag.)&lt;br /&gt;&lt;br /&gt;- If vijayganth has not entered in politics, they won't have thought about politics. They assured that their family will also vote for Vijayganth only.&lt;br /&gt;&lt;br /&gt;- The existing 2 big parties are always blamming each other. Public interest issues are not given importance.&lt;br /&gt;&lt;br /&gt;- They hate to get divided by "Jaathi". We are all Tamilans. "Emmadhamum Sammmadhame..."&lt;br /&gt;&lt;br /&gt;- One of them was a owner of tea stall which seems to the information center(news papers) and gathering place in the village. They regularly watch news paper like Dhina thandhi and dinamalar.&lt;br /&gt;&lt;br /&gt;- Their guess about the principles of the party( To be announced in the evening): Corruption, Agriculture, Rural development, Education(lowering the fees), reduction of   price in essential commodities.&lt;br /&gt;&lt;br /&gt;LUNCH:&lt;br /&gt;&lt;br /&gt;Due to unexpected crowd there was a huge shortage of food. I was told that food packets were supplied(not for free) in the meeting venue itself. But it was all over immediately. After 06:45am, I had my regular food at 10:15pm only. Till then, Bajji,pineapple,ice-cream,ground-nuts and nearly 10 water packets were food.&lt;br /&gt;&lt;br /&gt;EVENING INSPIRATION: ( 06:50pm to 08:20pm)&lt;br /&gt;&lt;br /&gt;In his morning talk, Vijayganth has told NOTHING about the principles of the party. Just announced the party name and told that he'll talk in detail in evening. So everybody were going cracy about what he's going to talk. You must have read the highlights of his talk in all the medias. so I'll make it short.&lt;br /&gt;&lt;br /&gt;- His one and a half hour talk can be classifed into 6 sections.&lt;br /&gt;&lt;br /&gt;1. Reading the principles of party: He frankly told that, his advisors asked him to just read the principles as it is in the printout.&lt;br /&gt;&lt;br /&gt;2. Personal details: This is about his rice-mill background, film-entry, struggle to become a hero.&lt;br /&gt;&lt;br /&gt;3. Relating himself with poor: I can able to live with very limited facilities. "Oru tamblar kanji kudichittu indha medailla kooda thoonga mudiyum...enna, my hand is clean.) I'm like you only("black")&lt;br /&gt;&lt;br /&gt;4. Works done in Rasigar mandram: Per year Rs.25 lakh worth of donation were given to general public, students and physically challenged.&lt;br /&gt;&lt;br /&gt;5. Explaining the party principles: Focus was on issues like "Corruption", "Development to Below poverty Line people", 33% reservation to women( He challenged that whether other parties are ready to give the same?),riverlinking,education, "Upliftment of farmers,labours and weavers". We won't be against "HINDI" and will encourage to read it. Same time we will&lt;br /&gt;protect tamil."Tamil kaapom...anaithu mozhigalayum erpom". This was a specific and bold principle. He referred it to the availability of employment opportunites for those who know other languages.&lt;br /&gt;&lt;br /&gt;6. Freedom struggle: Quoted examples from freedom struggle, Jail life of leaders. Except this, all other topics were handled by him excellently. My guess is, this was feeded to him by some expert groups. So that the "Dhesiya" in the party name will get some validity.&lt;br /&gt;&lt;br /&gt;The talk was in simple language. But it was touching. He made his FIRST impact as a VERY BEST impact. Sensation talk like(Neeyum karupu-Naanum karupu, Naanum rowdithanam panniyavanthaan, Veyil-mazhai paakaama oor ooraa varen..etc) got good clap when compared with development issues like rural development,BPL-families upliftment..etc.&lt;br /&gt;&lt;br /&gt;Nearly 2.5 lakh people attended the meeting from inside the avenue. A big digital screen was placed outside the meeting ground which attracted more than one lakh people. I was relating the situation with the "Ramana's" climax speech scene.&lt;br /&gt;&lt;br /&gt;That's the end of the show. Catched a train at 11:15pm and reached Chennai by 08:00am. Ofcourse unreserved, sitting in the upper birth !!!!. That too helped me to get introduced to a friend who has attended the meeting. He is an srilankan Tamilan. When they were in "Mandapam(Rameswaram) camp", Vijayganth visited them and supplied food and clothes.&lt;br /&gt;This happened nearly 15 years back. When their camp was shifted to Trichy, again Vijayganth visited them and helped them. He told that he can't forget Vijayganth in his life. He was the man who helped them, when they were in need...Salute to Captain...&lt;br /&gt;&lt;br /&gt;After Vijayganth's talk is over, there were lots of crackers fired in front of the meeting ground.&lt;br /&gt;It was very colorful, attractive and had many varieties. Everyone enjoyed it. But it was all over in 30 mins...&lt;br /&gt;&lt;br /&gt;LET US ALL HOPE THAT, DMDK'S PRINCIPLES WON'T GO LIKE THAT...&lt;br /&gt;&lt;br /&gt;Anbudan,&lt;br /&gt;Senthil Arumugam&lt;br /&gt;Mobile: 94431-19564&lt;br /&gt;Email: Senthil@sslindia.org&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-112931480925605351?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/112931480925605351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=112931480925605351' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/112931480925605351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/112931480925605351'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2005/10/blog-post.html' title='விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி துவக்க மாநாடு'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13129919.post-111691424494746826</id><published>2005-05-23T22:44:00.000-07:00</published><updated>2005-05-23T22:57:24.953-07:00</updated><title type='text'>Personality development program @ KCT, Coimbatore</title><content type='html'>Dear Friends,&lt;br /&gt;&lt;br /&gt;On 22nd May(Sunday) I've attended a program in Kumaraguru College of Technology(KCT), Coimbatore. KCT and  "Manitha Mempaatu Maiyyam",Coimbatore jointly organised this program. 900 students from various school in Coimbatore district gathered in the college for the inaguration function of a 7 days FREE residential course on personality development. Accomodation and food are also free. 9th and 11th standard students are selected for this program. In the 7 day program, the students will undergo 25 lectures and many practical sessions which will develop their personality. The students will stay in the KCT campus itself.&lt;br /&gt;&lt;br /&gt;The program was launched by Avinashilingam Vice Chancellor Dr.Kulandhaivelu.&lt;br /&gt;"Manitha Mempaatu Maiyyam" headed by Dr.Punnivanam is conducting courses like this for last 5 years. In last 5 years alone, they've conducted coursed for nearly 4000 students.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Senthil Arumugam&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13129919-111691424494746826?l=senthilarumugam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilarumugam.blogspot.com/feeds/111691424494746826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13129919&amp;postID=111691424494746826' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/111691424494746826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13129919/posts/default/111691424494746826'/><link rel='alternate' type='text/html' href='http://senthilarumugam.blogspot.com/2005/05/personality-development-program-kct.html' title='Personality development program @ KCT, Coimbatore'/><author><name>Senthil Arumugam</name><uri>http://www.blogger.com/profile/15028817288942527005</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry></feed>
