மதுவிலக்கும் - மக்கள் சக்தி இயக்கமும்
மதுவிலக்கும் - மக்கள் சக்தி இயக்கமும்
'மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்று ஒருபுறம் மதுப்புட்டிகளில் எழுதிவிட்டு 2007-08ல்ரூ.8800 கோடி வருமானத்தை மதுவிற்பனையிலிருந்து பெற்றிருக்கிறது தமிழக அரசு. 2008-09ல் இது ரூ.10 ஆயிரம்கோடியாக உயரவுள்ளது. இது மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு.
இலட்சக்கணக்கானஏழைத்தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதோடு, பெண்கள்-குழந்தைகளின் நலவாழ்வு-உரிமையையும் பறிக்கிறது மது.மக்களின் நலவாழ்வைவிட அரசாங்கத்தின் வருமானம்தான் முக்கியம் என்கிறது அரசு. இளைய தலைமுறையினர்மதுவில் மூழ்கிவிடாமால் காப்பாற்றப்பட வேண்டியதை மக்கள் சக்தி இயக்கம் ஒரு முக்கியமானதொரு பணியாகக் கருதுகிறது.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். சுவருக்கே சேதாரம் என்றால்??
பல்வேறு சமூகக் கொடுமைகளுக்குக் காரணமாகஇருக்கும் மதுவை படிப்படியாகக் குறைத்து பூரண மதுவிலக்கை கொண்டுவருவது மக்கள் சக்தி இயக்கத்தின் முக்கியமானதொரு கொள்கை. ஊரெங்கும் மதுக்கடைகளை திறந்துவைத்துவிட்டு, மது குடிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுவதுஎடுபடாது. எனவே மது குறித்து அரசு ஒரு கொள்கை முடிவெடுத்து மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் மதுப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.அரசு அத்தகைய கொள்கை முடிவெடுக்க இது பெரும்பாலான மக்களின் கோரிக்கை என்பதை அரசுக்கு உணர்த்தவேண்டும்.மதுவிலக்கிற்கு ஆதரவான மக்களின் சக்தியை ஒன்றுதிரட்டும் பணியில் தீவிரமாய் களமிறங்கியுள்ளது மக்கள் சக்தி இயக்கம்.
நாட்டு நலனில் அக்கறையுள்ள உங்களைப் போன்றோரின் ஆதரவை வேண்டுகிறோம். For Contact : 9443119564, 044-24421810
மதுவிலக்கு குறித்த இயக்கத்தின் செயல்பாடுகள்,கருத்துகள்:
செயல்பாடுகள்:
ஜீன் 22,2008 - மதுரையில் மதுவிலக்கு ஆர்வலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
மே 31, 2008 - சென்னையில் மதுவிலக்கு ஆர்வலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
ஏப்ரல் 27,2008 - உண்ணாவிரதப் போராட்டம் - கைது
கட்டுரைகள்:
1. மதுவிலக்கு வரலாறு
2. மதுவிலக்கு மாயையா?
-கலைஞர் கட்டுரைக்கு மறுப்பு
'மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்று ஒருபுறம் மதுப்புட்டிகளில் எழுதிவிட்டு 2007-08ல்ரூ.8800 கோடி வருமானத்தை மதுவிற்பனையிலிருந்து பெற்றிருக்கிறது தமிழக அரசு. 2008-09ல் இது ரூ.10 ஆயிரம்கோடியாக உயரவுள்ளது. இது மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு.
இலட்சக்கணக்கானஏழைத்தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதோடு, பெண்கள்-குழந்தைகளின் நலவாழ்வு-உரிமையையும் பறிக்கிறது மது.மக்களின் நலவாழ்வைவிட அரசாங்கத்தின் வருமானம்தான் முக்கியம் என்கிறது அரசு. இளைய தலைமுறையினர்மதுவில் மூழ்கிவிடாமால் காப்பாற்றப்பட வேண்டியதை மக்கள் சக்தி இயக்கம் ஒரு முக்கியமானதொரு பணியாகக் கருதுகிறது.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். சுவருக்கே சேதாரம் என்றால்??
பல்வேறு சமூகக் கொடுமைகளுக்குக் காரணமாகஇருக்கும் மதுவை படிப்படியாகக் குறைத்து பூரண மதுவிலக்கை கொண்டுவருவது மக்கள் சக்தி இயக்கத்தின் முக்கியமானதொரு கொள்கை. ஊரெங்கும் மதுக்கடைகளை திறந்துவைத்துவிட்டு, மது குடிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுவதுஎடுபடாது. எனவே மது குறித்து அரசு ஒரு கொள்கை முடிவெடுத்து மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் மதுப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.அரசு அத்தகைய கொள்கை முடிவெடுக்க இது பெரும்பாலான மக்களின் கோரிக்கை என்பதை அரசுக்கு உணர்த்தவேண்டும்.மதுவிலக்கிற்கு ஆதரவான மக்களின் சக்தியை ஒன்றுதிரட்டும் பணியில் தீவிரமாய் களமிறங்கியுள்ளது மக்கள் சக்தி இயக்கம்.
நாட்டு நலனில் அக்கறையுள்ள உங்களைப் போன்றோரின் ஆதரவை வேண்டுகிறோம். For Contact : 9443119564, 044-24421810
மதுவிலக்கு குறித்த இயக்கத்தின் செயல்பாடுகள்,கருத்துகள்:
செயல்பாடுகள்:
ஜீன் 22,2008 - மதுரையில் மதுவிலக்கு ஆர்வலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
மே 31, 2008 - சென்னையில் மதுவிலக்கு ஆர்வலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
ஏப்ரல் 27,2008 - உண்ணாவிரதப் போராட்டம் - கைது
கட்டுரைகள்:
1. மதுவிலக்கு வரலாறு
2. மதுவிலக்கு மாயையா?
-கலைஞர் கட்டுரைக்கு மறுப்பு