கிராமங்களும்....நகரங்களும்
நான் கோவையிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து ஒரு வருடமாகிறது. பல்வேறு சமூகப் பணிகளுக்காக தமிழகத்தின் பல கிராமங்களுக்கும், சிற்றூர்களுக்கும் சென்றுவிட்டு சென்னை திரும்பும்போது எத்தனையோ ஒப்பீடுகள் மனத்திரையில் ஓடுகின்றன.
முக்கிய சாலைகள் தினந்தோறும் கூட்டப்பட்டு கல், மண் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தண்ணீர் ஊற்றிக் கழுவியும் விடுவார்களோ என்னவோ ( நான் பார்த்ததில்லை !! ) ...இப்போது புதிதாகப் போடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய சாலையின் இரு மருங்கிலும் மரங்கள், செடிகள், ஓவியங்கள், கலைநயம்மிக்க இரும்பு வார்ப்புகள் என இழைத்து, இழைத்து சாலை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள், இது சென்னை நகரில்.
ஆயிரக்கணக்கான கிராமங்களில் கல்,மண்,குழி,மேடு இவைகள்தான் இன்னமும் சாலைகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.
போன உயிரை திருப்பித்தருதல் என்ற ஒரே சிகிச்சையைத் தவிர அனைத்து சிகிச்சைகளையும் தர தனித்தனி மருத்துவர்கள், மருத்துவமனைகள், சென்னை நகரில்.கிராமங்களில் அனாதைக் குழந்தை போல் கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் பிடிக்கும் கனவுத்திட்டத்தை ஆரம்பப் பள்ளியிலிருந்து ஊற்றி வளர்க்கும் பெற்றோர்கள், ஒரு புறம்.உண்ணல், உறங்கல், உழைத்தல் இவற்றிற்கே நேரம் போதாத வறுமை நிலையில் பெற்றோர்கள், மறுபுறம்.
பொறியியற் கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலை கிடைக்கிறது. பத்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை சம்பளத்தோடு, 22 வயதிலேயே.
மாத வருமானம் 2000த்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகள், விவசாயிகள் பல இலட்சம்.
கிராமத்து மக்கள் என்று மட்டுமில்லை, நகரங்களில் உள்ள சேரிகள், கீழ் நடுத்தரக் குடும்பங்கள் அனைவருக்கும் இதே நிலைதான்.
ஏன், இந்த மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் ?
இரண்டு புறம் இருப்பவர்களும் மனிதர்கள்தானே ?
இரண்டு பேரும் வசிப்பது தமிழகத்தில்தானே ?
ஏழைகளுக்கும்-பணக்காரர்களுக்கும், கிராமங்களுக்கும்-நகரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கும்போது ஒரு விகார உருவம் கண் முன் தோன்றுகிறது. தரை வரை நீண்ட கைகள், ஒரு கால் தரையில் படாமல் தொங்கிக் கொண்டுள்ளது, பானை போல் பெருத்த வயிறு, காதுகள் இல்லை, மூக்கில் ஒரு துவாரம்தான் உள்ளது. நினைத்துப் பார்ப்பதற்கே அருவருப்பாய் உள்ளதல்லவா ? ஆம், அப்படித்தான் உள்ளது நமது சமூகம்.
இலட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். ஏழைகள் பரம ஏழைகள் ஆகிக் கொண்டுள்ளார்கள்.
ஏன் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை ?
தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லையா ? விவசாய மேதைகள் இல்லையா ? விஞ்ஞானிகள் இல்லையா ? நல்ல ஆசிரியர்கள் இல்லையா ? எல்லா வல்லுனர்களும் இருக்கிறார்கள். உபயோகித்துக் கொள்வதற்குத்தான் யாருமில்லை. "கடை விரித்தேன். கொள்வாரில்லை" என்று சொல்லுவார்கள். அதுபோல அறிவு வெள்ளம் கரை புரண்டோடுகிறது இங்கே. அணை கட்டிப் பயன்படுத்திக் கொள்ளத்தான் ஆளில்லை.ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஆட்சியாளர்களுக்கு ஏழைகளின் வளர்ச்சியில் அக்கறை போதவில்லை; அணுகுமுறை சரியில்லை என்பதுதான்.
ஒரு சமயம் கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஒரு அரசு அலுவலகத்தைப் பார்வையிட வந்திருந்தார். அங்கு அதிகாரிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. என்ன கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கேட்டார். கிராம வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். கொஞ்சம் யோசித்துவிட்டு " நீங்கள் ஏன் அருகிலுள்ள ஏதேனும் ஒரு கிராமத்திலுள்ள பொது இடத்தில் அமர்ந்து இதனைப் பற்றிப் பேசக்கூடாது? அரசு அதிகாரிகளாகிய நீங்கள் கிராமங்களுக்குச் சென்றால், உங்களைப் பார்ப்பதற்கு நிறைய கிராம மக்கள் வருவார்கள். அவர்களையும் வைத்துக் கொண்டு பேசுங்களேன்; கிராமத்திற்குத் தேவையான திட்டங்கள் பற்றி ஆலோசனை சொல்வதற்கு அவர்களை விடச் சிறந்த ஆலோசகர்கள் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்கள்." என்றார் காமராஜர். என்ன எதார்த்தம் பாருங்கள். இதுவல்லவா ஆட்சி முறை. இதுவல்லவா ஜனநாயகம். கிராம மக்களிடமிருந்து கூட ஆலோசனைகள் பெறவேண்டும் என்ற எண்ணமுடையவர், வல்லுனர்களை வணங்கியல்லவா வரவேற்றிருப்பார். மக்களைப் படிக்கும் இந்த மனோபாவத்தால்தான் அந்த படிக்காத மேதையின் 9 வருட ஆட்சியை "தமிழகத்தின் பொற்கால ஆட்சி" என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இன்றும் எல்லா அமைச்சர்களும் கிராமத்திற்குச் செல்கிறார்கள்; விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக !!
புதியதாக ஆரம்பிக்கப்படும் பெரிய தொழில் நிறுவனங்கள் எல்லாம் நகரங்களுக்கு அருகிலேயே, குறிப்பாக சென்னை நகருக்கு அருகிலேயே ஆரம்பிக்கப்படுகிறது. அதனால்தான் நகரங்கள் வளர்கின்றன என்ற ஒரு வாதம் நம்முன் வைக்கப்படுகிறது.
ஏன் நகருக்கு அருகில் ஆரம்பிக்க விரும்புகிறார்கள்?
நகரத்திற்கு அருகில் இருப்பதால், மின்சாரம், தண்ணீர், சாலைகள், கழிவுநீரகற்றும் வசதி, தொலைபேசி, இன்டர்நெட் போன்ற அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக்கின்றது. எல்லா அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகமும் சென்னையில்தான் இருக்கின்றது. இது போன்ற தொழிலுக்கு சாதகமான காரணிகள் அதிகம் இருப்பதால், நகருக்கு அருகில் தொழில் தொடங்க விரும்புகிறார்கள். இவர்களை நாம் வலுக்கட்டாயமாக கிராமத்தில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைத்தால் " அடிப்படை வசதிகள் செய்து தாருங்கள், வருகிறோம் என்பார்கள்". அதற்கு நம் ஆட்சியாளர்களிடம் பதில் கிடையாது. பிறகெப்படி தொழில் நிறுவனங்களை கிராமத்திற்கு அழைத்து வரமுடியும் ?
சில அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது 'போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது' என்பார்கள். கிராமங்களுக்குத் தேவையான அடிப்படைவசதிகள் செய்து கொடுப்பதை ஒரு 'போர்க்கால நடவடிக்கையாக' அரசு எடுத்துச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து நகரங்கள் வளர்ந்து கொண்டும், கிராமங்கள் பின்தங்கியும் உள்ள சூழலே தொடரும்.
அரசு செய்ய வேண்டும் எனும்போது, மத்திய அரசா, மாநில அரசா அல்லது உள்ளாட்சி அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது?
கிராமங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பராமரித்தல் போன்ற பொறுப்புக்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தாலும் நிதியாதரம் இல்லாததால் மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் கையேந்தி நிற்கிறது தமிழ்நாட்டின் 12618 கிராம பஞ்சாயத்துக்கள்.
தன் தொகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு( M.P) தொகுதி வளர்ச்சி நிதி என்றொரு நிதி அளிக்கப்படுகிறது. இது 1993-94 இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்டிற்கு ரூ.5 இலட்சமாக இருந்தது. 1994-95லிலேயே இது ரூ.1 கோடியாகியது. 1998-99 இல் இது ரூ.2 கோடியாகியது. இதனை மத்திய அரசு தருகிறது.
இதேபோல் எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டிற்கு ரூ.1 கோடி தரப்படுகிறது. இதனை மாநில அரசு தருகிறது. ( தொகுதி வளர்ச்சி நிதி என்ற முறையே தேவையா...இல்லையா என்பது பற்றிய பல்வேறு விவாதங்கள், கோர்ட் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது ேவ்று விஷயம். அதைப்பற்றி பிறிதொரு சமயத்தில் விரிவாய்ப் பார்ப்போம்.)
சட்டமியற்றும் பணிதான் எம்.எல்.ஏ, எம்.பிக்களின் தலையாய பணி. ஆனால் இவர்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி என்ற ஒரு நிதி ஒதுக்கி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள் என்கிறது அரசு. தொடர்ந்து இந்த நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்து வருகிறது.
ஆனால் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசின் மொத்த வரி வருவாயிலிருந்து ஒதுக்கப்படும் நிதியானது 1997ல் இருந்து 8 சதவிகிதமாகவே இருந்து வருகிறது. அதாவது மாநில அரசுக்கு பல்வேறு வரி வசூல் மூலம் 100 ரூபாய் கிடைக்கிறது என்றால் அதில் 8 ரூபாயை உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கவேண்டும்.மாநில அரசின் வரி வருவாய் பல்வேறு துறைகளுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளைப் பெற வல்லுனர்களைக் கொண்ட "மாநில நிதி ஆணையத்தை" அமைக்கிறது அரசு. இந்த நிதிஆணையம் அரசுக்குப் பல்வேறு பரிந்துரைகளை அளிக்கிறது.
முதலாவது நிதிஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தியிருந்தாலே இந்த ஒதுக்கீடு 2001 ம் ஆண்டே 12 சதவிகிதமாகியிருக்கும். ஆம், 1995ம் ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் நிதி ஆணையமானது 1997-98 ம் ஆண்டில் 8 சதவிகிதம் ஒதுக்குங்கள்; பிறகு ஒவ்வொரு வருடமும் 1 சதவிகிதத்தை அதிகரித்து 2001-02 இல் இதனை 12 சதவிகிதம் ஆக்குங்கள் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது. 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மூன்றாவது நிதி ஆணையம் கூட அமைக்கப்பட்டுவிட்டது. இன்னமும் 8 சதவிகித நிதிதான் உள்ளாட்சியமைப்புகளுக்குத் தரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தென்மாநிலங்களிலேயே உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைந்த நிதி ஒதுக்கும் மாநிலம் தமிழகம்தான். மேற்கு வங்காளம் தன் வரிவசூலில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை உள்ளாட்சிகளுக்கு ஒதுக்குகிறது.
8 சதவிகிதத்தை இரண்டு மடங்காக்கிவிட்டால் கிராமங்கள் வளர்ந்து விடுமா ? அது மட்டுமே போதாது. அடிப்படை வசதிகள் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமே. நாம் கேட்பது, முதலில் அடித்தளத்தை அமையுங்கள். அதையே செய்யாமல், " வறுமையை ஒழிப்போம்" என்று வரட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
முக்கிய சாலைகள் தினந்தோறும் கூட்டப்பட்டு கல், மண் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தண்ணீர் ஊற்றிக் கழுவியும் விடுவார்களோ என்னவோ ( நான் பார்த்ததில்லை !! ) ...இப்போது புதிதாகப் போடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய சாலையின் இரு மருங்கிலும் மரங்கள், செடிகள், ஓவியங்கள், கலைநயம்மிக்க இரும்பு வார்ப்புகள் என இழைத்து, இழைத்து சாலை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள், இது சென்னை நகரில்.
ஆயிரக்கணக்கான கிராமங்களில் கல்,மண்,குழி,மேடு இவைகள்தான் இன்னமும் சாலைகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.
போன உயிரை திருப்பித்தருதல் என்ற ஒரே சிகிச்சையைத் தவிர அனைத்து சிகிச்சைகளையும் தர தனித்தனி மருத்துவர்கள், மருத்துவமனைகள், சென்னை நகரில்.கிராமங்களில் அனாதைக் குழந்தை போல் கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் பிடிக்கும் கனவுத்திட்டத்தை ஆரம்பப் பள்ளியிலிருந்து ஊற்றி வளர்க்கும் பெற்றோர்கள், ஒரு புறம்.உண்ணல், உறங்கல், உழைத்தல் இவற்றிற்கே நேரம் போதாத வறுமை நிலையில் பெற்றோர்கள், மறுபுறம்.
பொறியியற் கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலை கிடைக்கிறது. பத்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை சம்பளத்தோடு, 22 வயதிலேயே.
மாத வருமானம் 2000த்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகள், விவசாயிகள் பல இலட்சம்.
கிராமத்து மக்கள் என்று மட்டுமில்லை, நகரங்களில் உள்ள சேரிகள், கீழ் நடுத்தரக் குடும்பங்கள் அனைவருக்கும் இதே நிலைதான்.
ஏன், இந்த மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் ?
இரண்டு புறம் இருப்பவர்களும் மனிதர்கள்தானே ?
இரண்டு பேரும் வசிப்பது தமிழகத்தில்தானே ?
ஏழைகளுக்கும்-பணக்காரர்களுக்கும், கிராமங்களுக்கும்-நகரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கும்போது ஒரு விகார உருவம் கண் முன் தோன்றுகிறது. தரை வரை நீண்ட கைகள், ஒரு கால் தரையில் படாமல் தொங்கிக் கொண்டுள்ளது, பானை போல் பெருத்த வயிறு, காதுகள் இல்லை, மூக்கில் ஒரு துவாரம்தான் உள்ளது. நினைத்துப் பார்ப்பதற்கே அருவருப்பாய் உள்ளதல்லவா ? ஆம், அப்படித்தான் உள்ளது நமது சமூகம்.
இலட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். ஏழைகள் பரம ஏழைகள் ஆகிக் கொண்டுள்ளார்கள்.
ஏன் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை ?
தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லையா ? விவசாய மேதைகள் இல்லையா ? விஞ்ஞானிகள் இல்லையா ? நல்ல ஆசிரியர்கள் இல்லையா ? எல்லா வல்லுனர்களும் இருக்கிறார்கள். உபயோகித்துக் கொள்வதற்குத்தான் யாருமில்லை. "கடை விரித்தேன். கொள்வாரில்லை" என்று சொல்லுவார்கள். அதுபோல அறிவு வெள்ளம் கரை புரண்டோடுகிறது இங்கே. அணை கட்டிப் பயன்படுத்திக் கொள்ளத்தான் ஆளில்லை.ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஆட்சியாளர்களுக்கு ஏழைகளின் வளர்ச்சியில் அக்கறை போதவில்லை; அணுகுமுறை சரியில்லை என்பதுதான்.
ஒரு சமயம் கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஒரு அரசு அலுவலகத்தைப் பார்வையிட வந்திருந்தார். அங்கு அதிகாரிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. என்ன கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கேட்டார். கிராம வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். கொஞ்சம் யோசித்துவிட்டு " நீங்கள் ஏன் அருகிலுள்ள ஏதேனும் ஒரு கிராமத்திலுள்ள பொது இடத்தில் அமர்ந்து இதனைப் பற்றிப் பேசக்கூடாது? அரசு அதிகாரிகளாகிய நீங்கள் கிராமங்களுக்குச் சென்றால், உங்களைப் பார்ப்பதற்கு நிறைய கிராம மக்கள் வருவார்கள். அவர்களையும் வைத்துக் கொண்டு பேசுங்களேன்; கிராமத்திற்குத் தேவையான திட்டங்கள் பற்றி ஆலோசனை சொல்வதற்கு அவர்களை விடச் சிறந்த ஆலோசகர்கள் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்கள்." என்றார் காமராஜர். என்ன எதார்த்தம் பாருங்கள். இதுவல்லவா ஆட்சி முறை. இதுவல்லவா ஜனநாயகம். கிராம மக்களிடமிருந்து கூட ஆலோசனைகள் பெறவேண்டும் என்ற எண்ணமுடையவர், வல்லுனர்களை வணங்கியல்லவா வரவேற்றிருப்பார். மக்களைப் படிக்கும் இந்த மனோபாவத்தால்தான் அந்த படிக்காத மேதையின் 9 வருட ஆட்சியை "தமிழகத்தின் பொற்கால ஆட்சி" என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இன்றும் எல்லா அமைச்சர்களும் கிராமத்திற்குச் செல்கிறார்கள்; விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக !!
புதியதாக ஆரம்பிக்கப்படும் பெரிய தொழில் நிறுவனங்கள் எல்லாம் நகரங்களுக்கு அருகிலேயே, குறிப்பாக சென்னை நகருக்கு அருகிலேயே ஆரம்பிக்கப்படுகிறது. அதனால்தான் நகரங்கள் வளர்கின்றன என்ற ஒரு வாதம் நம்முன் வைக்கப்படுகிறது.
ஏன் நகருக்கு அருகில் ஆரம்பிக்க விரும்புகிறார்கள்?
நகரத்திற்கு அருகில் இருப்பதால், மின்சாரம், தண்ணீர், சாலைகள், கழிவுநீரகற்றும் வசதி, தொலைபேசி, இன்டர்நெட் போன்ற அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக்கின்றது. எல்லா அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகமும் சென்னையில்தான் இருக்கின்றது. இது போன்ற தொழிலுக்கு சாதகமான காரணிகள் அதிகம் இருப்பதால், நகருக்கு அருகில் தொழில் தொடங்க விரும்புகிறார்கள். இவர்களை நாம் வலுக்கட்டாயமாக கிராமத்தில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைத்தால் " அடிப்படை வசதிகள் செய்து தாருங்கள், வருகிறோம் என்பார்கள்". அதற்கு நம் ஆட்சியாளர்களிடம் பதில் கிடையாது. பிறகெப்படி தொழில் நிறுவனங்களை கிராமத்திற்கு அழைத்து வரமுடியும் ?
சில அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது 'போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது' என்பார்கள். கிராமங்களுக்குத் தேவையான அடிப்படைவசதிகள் செய்து கொடுப்பதை ஒரு 'போர்க்கால நடவடிக்கையாக' அரசு எடுத்துச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து நகரங்கள் வளர்ந்து கொண்டும், கிராமங்கள் பின்தங்கியும் உள்ள சூழலே தொடரும்.
அரசு செய்ய வேண்டும் எனும்போது, மத்திய அரசா, மாநில அரசா அல்லது உள்ளாட்சி அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது?
கிராமங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பராமரித்தல் போன்ற பொறுப்புக்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தாலும் நிதியாதரம் இல்லாததால் மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் கையேந்தி நிற்கிறது தமிழ்நாட்டின் 12618 கிராம பஞ்சாயத்துக்கள்.
தன் தொகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு( M.P) தொகுதி வளர்ச்சி நிதி என்றொரு நிதி அளிக்கப்படுகிறது. இது 1993-94 இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்டிற்கு ரூ.5 இலட்சமாக இருந்தது. 1994-95லிலேயே இது ரூ.1 கோடியாகியது. 1998-99 இல் இது ரூ.2 கோடியாகியது. இதனை மத்திய அரசு தருகிறது.
இதேபோல் எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டிற்கு ரூ.1 கோடி தரப்படுகிறது. இதனை மாநில அரசு தருகிறது. ( தொகுதி வளர்ச்சி நிதி என்ற முறையே தேவையா...இல்லையா என்பது பற்றிய பல்வேறு விவாதங்கள், கோர்ட் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது ேவ்று விஷயம். அதைப்பற்றி பிறிதொரு சமயத்தில் விரிவாய்ப் பார்ப்போம்.)
சட்டமியற்றும் பணிதான் எம்.எல்.ஏ, எம்.பிக்களின் தலையாய பணி. ஆனால் இவர்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி என்ற ஒரு நிதி ஒதுக்கி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள் என்கிறது அரசு. தொடர்ந்து இந்த நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்து வருகிறது.
ஆனால் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசின் மொத்த வரி வருவாயிலிருந்து ஒதுக்கப்படும் நிதியானது 1997ல் இருந்து 8 சதவிகிதமாகவே இருந்து வருகிறது. அதாவது மாநில அரசுக்கு பல்வேறு வரி வசூல் மூலம் 100 ரூபாய் கிடைக்கிறது என்றால் அதில் 8 ரூபாயை உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கவேண்டும்.மாநில அரசின் வரி வருவாய் பல்வேறு துறைகளுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளைப் பெற வல்லுனர்களைக் கொண்ட "மாநில நிதி ஆணையத்தை" அமைக்கிறது அரசு. இந்த நிதிஆணையம் அரசுக்குப் பல்வேறு பரிந்துரைகளை அளிக்கிறது.
முதலாவது நிதிஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தியிருந்தாலே இந்த ஒதுக்கீடு 2001 ம் ஆண்டே 12 சதவிகிதமாகியிருக்கும். ஆம், 1995ம் ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் நிதி ஆணையமானது 1997-98 ம் ஆண்டில் 8 சதவிகிதம் ஒதுக்குங்கள்; பிறகு ஒவ்வொரு வருடமும் 1 சதவிகிதத்தை அதிகரித்து 2001-02 இல் இதனை 12 சதவிகிதம் ஆக்குங்கள் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது. 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மூன்றாவது நிதி ஆணையம் கூட அமைக்கப்பட்டுவிட்டது. இன்னமும் 8 சதவிகித நிதிதான் உள்ளாட்சியமைப்புகளுக்குத் தரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தென்மாநிலங்களிலேயே உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைந்த நிதி ஒதுக்கும் மாநிலம் தமிழகம்தான். மேற்கு வங்காளம் தன் வரிவசூலில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை உள்ளாட்சிகளுக்கு ஒதுக்குகிறது.
8 சதவிகிதத்தை இரண்டு மடங்காக்கிவிட்டால் கிராமங்கள் வளர்ந்து விடுமா ? அது மட்டுமே போதாது. அடிப்படை வசதிகள் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமே. நாம் கேட்பது, முதலில் அடித்தளத்தை அமையுங்கள். அதையே செய்யாமல், " வறுமையை ஒழிப்போம்" என்று வரட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
0 Comments:
Post a Comment
<< Home